| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அரிசம்
|
அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள் ; மகிழ்ச்சி ; மிளகு .
|
|
அரிசயம்
|
சரக்கொன்றை ; எலுமிச்சை .
|
|
அரிசலம்
|
சரக்கொன்றை ; எலுமிச்சை .
|
|
அரிசனம்
|
காண்க : மஞ்சள் ; தாழ்த்தப்பட்டோர் .
|
|
அரிசா
|
பெருங்குமிழமரம் .
|
|
அரிசி
|
உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் .
|
|
அரிசிக்கம்பு
|
கம்புப் பயிர்வகை .
|
|
அரிசிக்காடி
|
புளித்த கஞ்சி .
|
|
அரிசிப்பல்
|
சிறுபல்
|
|
அரிசிப்புல்
|
செஞ்சாமை ; காண்க : மந்தங்காய்ப்புல் .
|
|
அரிசு
|
மிளகு ; வேம்பு .
|
|
அரிட்டம்
|
கேடு ; பிள்ளை பெறும் இடம் ; நன்மை ; சாக்குறி ; மிளகு ; வெள்ளுள்ளிப் பூண்டு ; கடுகுரோகிணிப் பூண்டு ; வேப்பமரம் ; மோர் ; கள் ; முட்டை ; காகம் .
|
|
அரிட்டித்தல்
|
கொல்லல் .
|
|
அரிட்டை
|
தீங்கு ; கடுகுரோகிணிப் பூண்டு .
|
|
அரிடம்
|
காண்க : அரிட்டம் .
|
|
அரிணம்
|
மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு .
|
|
அரிணி
|
அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி .
|
|
அரிணை
|
கள் .
|
|
அரித்தல்
|
தினவெடுத்தல் ; மேய்தல் ; கொழித்தெடுத்தல் ; தூசு போக்கல் ; கூட்டுதல் ; நீர் அறுத்துச் செல்லுதல் ; நீரில் கழுவிப் பிரித்தல் ; பூச்சி தின்னுதல் ; வருத்துதல் ; இடைவிடுதல் ; சிறிது சிறிதாகக் கவர்தல் .
|
|
அரித்திரம்
|
மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .
|
|
அரித்திராபம்
|
மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .
|
|
அரித்து
|
பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் .
|
|
அரித்தை
|
நடுக்கம் ; துன்பம் .
|
|
அரித்தை
|
(வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று .
|
|
அரிதகி
|
காண்க : கடுக்காய் .
|
|
அரிதட்டு
|
சல்லடை .
|
|
அரிதம்
|
பசும்புரவி ; மஞ்சள் ; பூமி .
|
|
அரிதல்
|
அறுத்தல் .
|
|
அரிதாட்புள்ளி
|
கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு .
|
|
அரிதாரம்
|
தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் .
|
|
அரிதாலம்
|
பொன்னரிதாரம் ; மஞ்சள் நிறமான ஒருவகைப் புறா .
|
|
அரிதாள்
|
கதிரறுத்த தாள் ; திருமால் திருவடி .
|
|
அரிதாளம்
|
நவதாளத்துள் ஒன்று ; பொன்னரி தாரம் .
|
|
அரிதினம்
|
ஏகாதசி .
|
|
அரிது
|
அருமை ; பசுமை .
|
|
அரிதொடர்
|
தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி .
|
|
அரிந்தமன்
|
பகைவரையடக்குவோன் ; திருமால் .
|
|
அரிநூற்பொறி
|
தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி .
|
|
அரிப்பரித்தல்
|
கொழித்து எடுத்தல் .
|
|
அரிப்பறை
|
செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை .
|
|
அரிப்பன்
|
காண்க : அரிப்புக்காரன் .
|
|
அரிப்பனி
|
இடைவிட்ட துளி .
|
|
அரிப்பிரியம்
|
கடம்பு ; கடுகுரோகிணி ; சங்கு .
|
|
அரிப்பிரியை
|
திருமாலால் விரும்பப்பட்டவள் , திருமகள் .
|
|
அரிப்பு
|
பிரித்தெடுக்கை ; குற்றம் ; சினம் ; தினவு .
|
|
அரிப்புக்காரன்
|
அரித்துப் பொருள் தேடுவோன் .
|
|
அரிப்புக்கூடை
|
சல்லடை .
|
|
அரிப்புழுக்கல்
|
அரிசிச்சோறு .
|
|
அரிப்பெட்டி
|
சல்லடை .
|
|
அரிபாலுகம்
|
தக்கோலச்செடி .
|
|
அரிமஞ்சரி
|
குப்பைமேனிப் பூண்டு .
|
|
அரிமணல்
|
நுண்மணல் .
|
|
அரிகயிறு
|
தொட்ட கையை அரியும் நூற்பொறி .
|
|
அரிகரகுமரன்
|
ஐயனார்
|
|
அரிகரபுத்திரன்
|
ஐயனார்
|
|
அரிகரன்
|
திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி .
|
|
அரிகல்
|
மேருமலை .
|
|
அரிகால்
|
காண்க : அரிதாள் .
|
|
அரிகிணை
|
மருதநில வாத்தியம் .
|
|
அரிகுரல்
|
கரகரத்த குரல் .
|
|
அரிகூடம்
|
கோபுரவாயில் மண்டபம் .
|
|
அரிகேசரி
|
பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் .
|
|
அரிச்சாவி
|
காண்க : அரிசா .
|
|
அரிச்சிகன்
|
சந்திரன் .
|
|
அரிச்சுவடி
|
அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் .
|
|
அரிசந்தனம்
|
தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு .
|