| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அமுத்தம்
|
நெல்லி ; வச்சநாபி ; கையாயுதம் .
|
|
அமுதகடிகை
|
நற்செயல்களுக்குரிய நாழிகை .
|
|
அமுதகதிரோன்
|
சந்திரன் .
|
|
அமுதகம்
|
அமிர்தம் ; பாற்கடல் ; கொங்கை ; நீர் .
|
|
அமுதகிரணன்
|
காண்க : அமிர்தகிரணன் .
|
|
அமுதகுண்டம்
|
இரப்போர் கலம் .
|
|
அமுதகுண்டை
|
இரப்போர் கலம் .
|
|
அமுதகுலர்
|
இடையர் ; சான்றோர் .
|
|
அமுதங்கம்
|
காண்க : சதுரக்கள்ளி .
|
|
அமுதசம்பூதன்
|
சந்திரன் .
|
|
அமுதசருக்கரை
|
சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை .
|
|
அமுதசாரணி
|
வெள்வேல மரம் .
|
|
அமுதசுரபி
|
எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் .
|
|
அமுததரம்
|
மஞ்சிட்டிச் செடி .
|
|
அமுததாரணை
|
உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு .
|
|
அமுதப்பார்வை
|
இனிய நோக்கு .
|
|
அமுதபுட்பம்
|
சிறுகுறிஞ்சாக்கொடி .
|
|
அமுதம்
|
அமிர்தம் ; சோறு ; நீர் ; சுவை ; உப்பு ; தயிர் ; பூமிச்சருக்கரை ; காட்டுக்கொஞ்சி ; விந்து ; திரிபலை ; திரிகடுகம் ; வீடுபேறு .
|
|
அமுதர்
|
அழிவில்லாதவர் ; கடவுள் ; தேவர் ; இடையர் .
|
|
அமுதவல்லி
|
அமிர்தவல்லி ; திருமாலின் மகள் ; சீந்தில் .
|
|
அமுதவெழுத்து
|
மங்கல வெழுத்து ; அ , இ , உ , எ , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் என்பன . காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து .
|
|
அமுதவேணி
|
கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன் .
|
|
அமுதன்
|
அழிவில்லாதவன் , கடவுள் .
|
|
அமுதாசனர்
|
தேவர் .
|
|
அமுதாரி
|
பூனைக்காலி .
|
|
அமுது
|
அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் .
|
|
அமுதுகுத்துதல்
|
உறைமோர் ஊற்றுதல் .
|
|
அமுதுசெய்தல்
|
உண்ணுதல் .
|
|
அமுதுபடி
|
அரிசி .
|
|
அமுதுபடைத்தல்
|
உணவு பரிமாறுதல் .
|
|
அமுதுமண்டபம்
|
கோயில் மடைப்பள்ளி .
|
|
அமுதூட்டுதல்
|
பிள்ளைக்கு ஏழாமாதத்தில் சோறூட்டுதல் .
|
|
அமூர்த்தம்
|
உருவமின்மை , அருவநிலை .
|
|
அமூர்த்தன்
|
வடிவம் இல்லாத சிவன் .
|
|
அமூர்த்தி
|
வடிவம் இல்லாத சிவன் .
|
|
அமூலம்
|
காரணம் இல்லாதது .
|
|
அமேத்திய நாறி
|
ஒரு பூண்டு ; ஒரு மரம் ; பீநாறிச் சங்கு .
|
|
அமேத்தியம்
|
மலம் ; மூங்கில் .
|
|
அமேயம்
|
அளவிட முடியாதவன் .
|
|
அமை
|
அமைவு ; அழகு ; தினவு ; மூங்கில் ; நாணல் ; அமாவாசை ; சந்திரனுடைய பதினாறாங்கலை .
|
|
அமை
|
(வி) அமர்த்து ; பொருத்து .
|
|
அமிர்தம்
|
உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .
|
|
அமிருதம்
|
உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .
|
|
அமிர்தயோகம்
|
நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் .
|
|
அமிர்தர்
|
அமுதமுண்பவர் ; தேவர் .
|
|
அமிர்தவல்லி
|
சீந்திற்கொடி .
|
|
அமிர்தன்
|
தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன் .
|
|
அமிர்து
|
காண்க : அமிர்(ரு)தம் .
|
|
அமிழ்து
|
காண்க : அமிர்(ரு)தம் .
|
|
அமிர்தை
|
பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் .
|
|
அமிழ்த்தல்
|
ஆழச்செய்தல் .
|
|
அமிழ்தம்
|
காண்க : அமிர்(ரு)தம் .
|
|
அமிழ்தல்
|
ஆழ்தல் ; தோய்தல் .
|
|
அமினா
|
காண்க : அமீனா .
|
|
அமீர்
|
முகமதியச் செல்வன் ; முகமதியத் தலைவன் .
|
|
அமீன்
|
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் .
|
|
அமீனா
|
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் .
|
|
அமுக்கடி
|
மந்தாரம் , மூட்டமாயிருத்தல் ; மக்கள் நெருக்கம் .
|
|
அமுக்கன்
|
மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .
|
|
அமுக்கி
|
மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .
|
|
அமுக்கிரா
|
அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
|
|
அமுக்கிரி
|
அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
|
|
அமுக்குரா
|
அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
|
|
அமுக்குதல்
|
அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் .
|
|
அமுங்குதல்
|
அழுந்துதல் ; அமர்தல் ; நெரிபடுதல் .
|
|
அமுசம்
|
சிறு செருப்படைப் பூண்டு ; அன்னப் பறவை .
|
|
அமுசு
|
ஒட்டடை .
|