| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
காவற்புரி
|
வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை ; நெற்குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை .
|
|
காவற்பெண்டு
|
செவிலித்தாய் ; பெண்பாற்புலவருள் ஒருவர் .
|
|
காவற்றண்டனை
|
சிறையிலிருக்கும் தண்டனை .
|
|
காவற்றெய்வதம்
|
காக்குந் தெய்வம் .
|
|
காவன்
|
சிலந்திப்பூச்சி .
|
|
காவன்மகளிர்
|
பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் .
|
|
காவன்மரம்
|
அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம் .
|
|
காவன்முரசம்
|
காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு .
|
|
காவன்முல்லை
|
அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை .
|
|
காவா
|
காட்டுமல்லிகை .
|
|
காவாங்கரை
|
வாய்க்காற்கரை .
|
|
காவாய்
|
ஒருவகைப் புல் .
|
|
காவாலி
|
சிவன் ; மனம்போனபடி நடப்பவன் .
|
|
காவாளர்
|
காவடி சுமப்பவர் .
|
|
காவாளி
|
காட்டுமல்லிகை ; காய்வேளைப் பூடு .
|
|
காவாளை
|
காட்டுமல்லிகை ; காய்வேளைப் பூடு .
|
|
காவி
|
காவிக்கல் ; ஆடையிலேறும் பழுப்பு ; பற்காவி ; கருங்குவளை ; கள் ; அவுரி மருந்துருண்டை ; கப்பலின் தலைப்பாய் .
|
|
காவிக்கல்
|
ஒருவகைச் சிவப்புத் தாது .
|
|
காவிதி
|
வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டப்பெயர் ; வணிகமாதர் பெறும் பட்டவகை ; கணக்கர் சாதி ; மந்திரி ; வரிதண்டும் அரசாங்கத் தலைவர் .
|
|
காவிதிப்புரவு
|
அரசராற் காவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர் .
|
|
காவிதிப்பூ
|
காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ .
|
|
காவிதிமை
|
கணக்குவேலை .
|
|
காவிபிடித்தல்
|
பழுப்புநிறம் ஏறுதல் .
|
|
காவிமண்
|
செம்மண் .
|
|
காவியகுணம்
|
செய்யுட்குணம் ; அவை : செறிவு ; தெளிவு , சமநிலை , இன்பம் , ஒழுகிசை , உதாரம் , உய்த்தலில் பொருண்மை , காந்தம் , வலி , சமாதி என்னும் பத்து .
|
|
காவியம்
|
பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள் ; கலம்பகம் ; பரணி முதலிய சிற்றிலக்கியம் .
|
|
காவியன்
|
சுக்கிரன் .
|
|
காவியாக்கட்டை
|
நங்கூரக்கட்டை .
|
|
காவியேறுதல்
|
ஆடையில் நீர்ப்பழுப்பேறுதல் .
|
|
காவிரிபுதல்வர்
|
வேளாளர் , உழவர் .
|
|
காவிளை
|
காய்வேளைப்பூடு ; கொழிஞ்சி .
|
|
காவு
|
சோலை ; சிறுதெய்வங்களுக்கு இடும் பலி ; காவுப்பொருட்குரிய மை .
|
|
காவுதடி
|
காவடித் தண்டு .
|
|
காவுதல்
|
காவடி சுமத்தல் ; சுமத்தல் ; விரும்புதல் .
|
|
காவுப்பொட்டு
|
பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப் பொட்டு .
|
|
காவுவோர்
|
பல்லக்குச் சுமப்போர் .
|
|
காவேரிமணல்
|
அயமணல் .
|
|
காவேளை
|
காய்வேளைப் பூண்டு .
|
|
காவோலை
|
முற்றின வோலை .
|
|
காழ்
|
மரவயிரம் , மனவுறுதி ; கட்டுத்தறி ; தூண் ; ஓடத்தண்டு ; இருப்புக்கம்பி ; யானைப் பரிக்கோல் ; கதவின் தாழ் ; விறகு ; காம்பு ; கழி ; இரத்தினம் ; முத்து ; பளிங்கு ; பூமாலை ; மணிவடம் ; நூற்சரடு ; விதை ; கொட்டை ; கருமை ; குற்றம் .
|
|
காவல்
|
பாதுகாப்பு ; வேலி ; மதில் ; சிறைச்சாலை ; காவலாள் ; பரண் ; காக்கப்படும் நாடு ; கவசம் .
|
|
காவல்கட்டு
|
தக்க காப்பு ; நோயாளியின் பத்தியப் பாதுகாப்பு .
|
|
காவல்மாற்றுதல்
|
இளைப்பாறுதற்பொருட்டுக் காவலரை முறைமாற்றி அமர்த்தல் .
|
|
காவல்மேரை
|
காவலுக்காகக் கொடுக்கும் தானியம் .
|
|
காவலறை
|
காக்கப்படும் பொருளறை ; காவல் காத்து நிற்கும் அறை .
|
|
காவலன்
|
பாதுகாப்போன் ; அரசன் ; மெய்காப்பாளன் ; கணவன் ; கடவுள் .
|
|
காவலாள்
|
காவற்காரன் .
|
|
காவலாளன்
|
காவற்காரன் .
|
|
காவலாளி
|
காவற்காரன் ; கணவன் .
|
|
காவற்கட்டு
|
காவல் செய்வதற்குரிய ஏற்பாடு .
|
|
காவற்கடவுள்
|
திருமால் .
|
|
காவற்கணிகை
|
களத்து ஆடும் கூத்தி .
|
|
காவற்கலி
|
வாழைமரம் .
|
|
காவற்காடு
|
கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு .
|
|
காவற்காரன்
|
காவல் செய்வோன் .
|
|
காவற்கூடம்
|
சிறைச்சாலை .
|
|
காவற்கூடு
|
காவலாளர் தங்குமிடம் .
|
|
காவற்சாலை
|
காண்க : காவற்கூடம் .
|
|
காவற்சோலை
|
அரசர் விளையாடுதற்குரிய நந்தவனம் .
|
|
காவற்பிரிவு
|
தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு .
|