| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கருமசம்
|
அரசமரம் ; கருமத்தினாலே தோன்றிய ரோகம் முதலியன ; களங்கம் ; வினைப்பயன் ; கலியுகம் .
|
|
கருமசாட்சி
|
சூரியன் .
|
|
கருமசுத்தி
|
பாவம் நீக்கல் ; செயலைக் குற்றமறச் செய்கை .
|
|
கருமசேடம்
|
பல்வேறு அனுபவங்களைக் கொண்டு செலுத்தும் வினைக்குறை .
|
|
கருமஞ்சரி
|
நாயுருவிச்செடி .
|
|
கருமஞ்செய்தல்
|
இறுதிக்கடன் செய்தல் .
|
|
கருமணல்
|
கரிய நுண்மணல் .
|
|
கருமணி
|
கண்ணின்மணி ; கருகுமணி , நீலமணி .
|
|
கருமத்தம்
|
கருவூமத்தை .
|
|
கருமத்தலைவன்
|
காரியத்தலைவன் .
|
|
கருமத்துரோகம்
|
துரோகச்செயல் .
|
|
கருமநிவர்த்தி
|
வினையொழிவு ; முன் செய்த தீவினை நீங்கப் புரியும் கிரியை .
|
|
கருமப்பழி
|
துரோகம் .
|
|
கருமப்பிறப்பு
|
பாவசென்மம் .
|
|
கருமபந்தம்
|
வினைகளாலான கட்டு .
|
|
கருமபந்தனம்
|
வினைகளாலான கட்டு .
|
|
கருமபலன்
|
வினைப்பயன் .
|
|
கருமபாகை
|
வேதநூற்பொருளின் ஒன்று , கருமகாண்டம் .
|
|
கருமபூமி
|
உழவு , தொழில் , வரைவு , வாணிகம் , விச்சை , சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி ; சுடுகாடு ; வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு .
|
|
கருமம்
|
செயல் ; வினைப்பயன் ; தொழில் வேதசம்பந்தமான சடங்கு ; இறுதிக்கடன் ; செயப்படுபொருள் ; வெம்மை ; மும்மலங்களுள் ஒன்றாகிய கன்மவிதி .
|
|
கருப்புவில்லி
|
கரும்பை வில்லாகவுடைய மன்மதன் .
|
|
கருப்பூர்வழக்கு
|
தீராத வழக்கு .
|
|
கருப்பூரம்
|
பொன் ; ஒரு மணச்சரக்கு ; பொன்னரிதாரம் ; ஒரு மரவகை .
|
|
கருப்பேந்திரம்
|
கரும்பாலை .
|
|
கருப்பை
|
கருப்பப் பை ; காரெலி ; ஒருவகைப் பனை .
|
|
கருப்பொருள்
|
காரணப் பொருள் ; ஐந்திணைக்கும் உரிய தெய்வம் முதலிய பொருள்கள் .
|
|
கருப்போட்டம்
|
மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம் .
|
|
கரும்படை
|
மேகப்படை .
|
|
கரும்பணி
|
பெண்களின் தோள் மார்புகளில் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பு வடிவாக வரையப்படும் கோலம் .
|
|
கரும்பன்
|
கரும்பை வில்லாகவுடைய மன்மதன் .
|
|
கரும்பனசை
|
கருவழலைப் பாம்பு .
|
|
கரும்பாடு
|
ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம் .
|
|
கரும்பாம்பு
|
இராகு ; கருவழலைப் பாம்பு .
|
|
கரும்பாலை
|
கரும்பாட்டும் ஆலை , பாலைமரவகை .
|
|
கரும்பித்தம்
|
ஒருவகைப் பித்தநீர் ; பைத்தியம் ; ஒரு நோய் .
|
|
கரும்பிள்ளை
|
காக்கை .
|
|
கரும்பிறப்பு
|
நரகப்பிறவி .
|
|
கரும்பிறை
|
கரும்பளிங்குக் கல் ; கருஞ்சுக்கான் கல் .
|
|
கரும்பு
|
ஒருவகைப் பயிர் ; புனர்பூசம் .
|
|
கரும்புசம்
|
வண்டு , ஒருவகைக் கரிய வண்டு .
|
|
கரும்புல்
|
பனைமரம் .
|
|
கரும்புள்
|
கரிக்குருவி ; காகம் ; வண்டுவகை ; பெண்வண்டு .
|
|
கரும்புள்ளிக்கல்
|
உலோக தாதுவுள்ள கல்வகை .
|
|
கரும்புளித்தல்
|
களிம்பூறுதல் , செம்பிற் களிம்பினால் மோர் முதலியன திரிந்து கெடுதல் .
|
|
கரும்புற்று
|
கருநிறமுள்ள கிரந்திவகை .
|
|
கரும்புறத்தோர்
|
விலங்குகளை வேட்டையாடி உண்ணும் இனத்தார் .
|
|
கரும்புறம்
|
பனைமரம் ; கருமை .
|
|
கரும்பூ
|
நீலோற்பலம் , கருங்குவளை .
|
|
கரும்பேன்
|
ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி .
|
|
கரும்பொன்
|
இரும்பு .
|
|
கருமக்கருத்தன்
|
கருமஞ்செய்பவன் ; செயப்படுபொருள் வினைமுதல்போல் வருவது .
|
|
கருமக்கழிபலம்
|
தீவினையைக் கழிக்கும் நல்வினை .
|
|
கருமக்காமம்
|
செயலின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம் .
|
|
கருமக்கோட்பாடு
|
மேற்கொண்ட செயல் .
|
|
கருமகர்த்தா
|
காண்க : கருமக்கருத்தன் .
|
|
கருமகள்
|
சண்டாளி ; காக்கை .
|
|
கருமகன்
|
கொல்லன் .
|
|
கருமகாண்டம்
|
வேள்வி முதலிய வைதிக தருமங்களைப்பற்றிக் கூறும் வேதத்தின் முற்பகுதி ; முற்பிறப்புத் தீவினைகளால் ஏற்படும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிச்சை முறையையும் விளக்கும் ஒரு மருத்துவ நூல் .
|
|
கருமகாண்டி
|
வைதிகக் கிரியைகளின்படி நடப்பவள் .
|
|
கருமகீலகன்
|
வண்ணான் .
|
|
கருமச்சார்ச்சி
|
இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று . அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் ; அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு .
|
|
கருமச்சார்பு
|
இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று . அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் ; அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு .
|
|
கருமசண்டாளன்
|
இராகு ; துரோகி , பொறாமை முதலிய தீக்குணமுடையவன் .
|