| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கடன்கழித்தல்
|
கடமையைச் செய்தல் ; பிதிர் கருமஞ் செய்தல் ; நித்திய கருமஞ் செய்தல் ; கடனைத் தீர்த்தல் ; கரிசனமற்ற வேலை செய்தல் ; மனமின்றிச் செய்தல் .
|
|
கடன்காரன்
|
கடன்பட்டவன் ; கடன் கொடுத்தவன் ; அகால மரணம் அடைந்தவன் .
|
|
கடன்காரி
|
கடன்பட்டவள் ; கடன் கொடுத்தவள் ; அகால மரணம் அடைந்தவள் .
|
|
கடன்கேட்டல்
|
கடன் கொடுக்கும்படி கேட்டல் ; கொடுத்த கடனைக் கேட்டல் .
|
|
கடன்கோடல்
|
பணத்தைக் கடனாகக் கொள்ளுகை , வழக்குப் பதினெட்டனுள் ஒன்று .
|
|
கடன்சீட்டு
|
கடன்பத்திரம் .
|
|
கடன்படுதல்
|
கடன்வாங்குதல் ; கடனுக்குள்ளாதல் .
|
|
கடன்பத்திரம்
|
கடன்சீட்டு .
|
|
கடன்பற்று
|
கடனாகப் பெற்ற பொருள் .
|
|
கடன்பற்றுதல்
|
கொடுத்த கடனை வாங்கிக் கொள்ளுதல் .
|
|
கடன்மரம்
|
மரக்கலம் , கப்பல் .
|
|
கடன்மல்லை
|
மாமல்லபுரம் .
|
|
கடன்முரசோன்
|
காமன் , மன்மதன் .
|
|
கடன்முள்ளி
|
கத்தரிவகை .
|
|
கடன்முறி
|
காண்க : கடன்சீட்டு .
|
|
கடன்முறை
|
பெரியோர் வழிபாடு , பெரியோர்க்குச் செய்யும் மரியாதை .
|
|
கடன்மை
|
தன்மை ; முறைமை .
|
|
கடனம்
|
தாழ்வாரம் ; முயற்சி ; ஊக்கம் .
|
|
கடனாய்
|
கடலில் வாழும் நீர்நாய் .
|
|
கடவுதல்
|
செலுத்துதல் ; முடுக்குதல் ; வினாவுதல் , கேட்டல் ; தகுதியாதல் .
|
|
கடவுநர்
|
செலுத்துவோர் .
|
|
கடவுள்
|
இறைவன் ; வானவன் ; முனிவன் ; குரு ; நன்மை ; மேன்மை ; தெய்வத்தன்மை .
|
|
கடவுள்எழுதுதல்
|
தெய்வ வடிவைச் சமைத்தல் .
|
|
கடவுள்தாரம்
|
தேவதாரு மரம் .
|
|
கடவுள்வாழ்த்து
|
தெய்வ வணக்கம் ; மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச் சொல்லும் புறத்துறை .
|
|
கடவுள்வேள்வி
|
தேவயாகம் , தேவர்பொருட்டு ஓமத்தீயில் செய்யும் வேள்வி .
|
|
கடவுளர்
|
தேவர் , தேவகணத்தார் .
|
|
கடவுளார்
|
தேவர் , தேவகணத்தார் .
|
|
கடவை
|
கடக்கை ; வழி ; வாயில் ; ஏணி ; கடப்பு மரம் ; தணக்குமரம் ; குற்றம் .
|
|
கடவைப்படுதல்
|
நீங்குதல் ; காணாமற்போதல் .
|
|
கடற்கரை
|
கடலருகு , கடல் ஓரம் , கடலின் எல்லை .
|
|
கடற்காக்கை
|
கடற்காகம் என்னும் பறவை ; கடலிறஞ்சி மரம் .
|
|
கடற்காளான்
|
கடலின் ஒருவகைப் பாசி .
|
|
கடற்காற்று
|
கடலினின்று நிலத்தை நோக்கி வீசும் காற்று .
|
|
கடற்கிடந்தோன்
|
கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் .
|
|
கடற்குதிரை
|
ஒரு மீன்வகை .
|
|
கடற்குருவி
|
காண்க : கல்லுப்பு .
|
|
கடற்கொஞ்சி
|
ஒரு மரவகை , சீமைக்கொஞ்சி .
|
|
கடற்கொடி
|
தும்பை .
|
|
கடற்கொழுப்பை
|
எழுத்தாணிப்பூண்டு .
|
|
கடற்கொள்ளை
|
கப்பற்கொள்ளை .
|
|
கடற்கொள்ளைக்காரன்
|
கப்பற் கொள்ளைக் காரன் .
|
|
கடற்கோ
|
வருணன் , கடலரசன் , கடல்தெய்வம் .
|
|
கடற்கோடு
|
கடற்கரை .
|
|
கடற்சார்பு
|
நெய்தல்நிலம் .
|
|
கடற்சில்
|
கடல்மரக்கொட்டை .
|
|
கடற்செலவு
|
கடற்பயணம் .
|
|
கடற்சேர்ப்பன்
|
நெய்தல்நிலத் தலைவன் .
|
|
கடற்பக்கி
|
காண்க : கடற்பட்சி .
|
|
கடற்பச்சை
|
காண்க : கடற்பாலை .
|
|
கடற்பஞ்சு
|
கடற்காளான் .
|
|
கடற்பட்சி
|
கிளிஞ்சில் .
|
|
கடற்படை
|
கப்பற்படை .
|
|
கடற்பன்றி
|
ஒரு கடல்விலங்கு , பெருமீன்வகை .
|
|
கடற்பாசி
|
ஒருவகைக் காளான் , கடற்பூடு .
|
|
கடற்பாம்பு
|
கடலில் வாழும் நச்சுப் பாம்புவகை .
|
|
கடற்பாய்ச்சி
|
கடலில் கப்பற் செலுத்துவோன் .
|
|
கடற்பாலை
|
சோழி .
|
|
கடற்பிணா
|
நெய்தல்நிலப் பெண் .
|
|
கடற்பிறந்தாள்
|
பாற்கடலில் தோன்றிய திருமகள் .
|
|
கடற்புறம்
|
ஆறுகள் கடலுடன் கூடும் முகத்தில் உள்ள மணல் அடைப்பு ; கடற்கரைப் பகுதி .
|
|
கடற்பூ
|
செம்மருது .
|
|
கடற்பெருக்கு
|
கடலில் நீரேற்றம் .
|
|
கடற்றாமரை
|
பெருந்தாமரை .
|
|
கடற்றாழை
|
கொந்தாழை ; வாட்டாழை .
|
|
கடற்றுறை
|
துறைமுகம் .
|
|
கடற்றெங்கு
|
தென்னைவகை .
|
|
கடற்றெய்வம்
|
வருணன் .
|
|
கடறு
|
காடு ; அருவழி ; பாலைநிலம் ; மலைச் சாரல் ; வாளுறை .
|
|
கடன்
|
முறைமை ; இருணம் ; இரவற்பொருள் ; இயல்பு ; வைதிகக் கிரியை ; விருந்தோம்பல் ; மரக்கால் ; குடியிறை ; மானம் ; இறுதிக்கடன் ; பின்னர்த் தருவதாக வாங்கிய பொருள் ; கடப்பாடு .
|
|
கடன்கட்டாய்ப்பேசுதல்
|
கடுமையாய்ப் பேசுதல் .
|