| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
எண்சிறப்பு
|
அருகனுக்குச் செய்யப்படும் எண்வகைச் சிறப்புகள் ; தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , முக்குடை .
|
|
எண்சிறப்புள்ளோன்
|
அருகன் .
|
|
எண்சுவடி
|
கணக்கேடு , பெருக்கல் வாய்பாட்டு நூல் .
|
|
எண்சுவை
|
எட்டுச் சுவைகள் ; நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை .
|
|
எண்செய்யுள்
|
எண்ணாற் பெயர்பெறும் நூல் , பத்து முதல் ஆயிரம் அளவும் பாடிப் பாடல் எண் அளவால் பெயர்பெறும் இலக்கியம் .
|
|
எண்டிக்கு
|
எட்டுத்திக்கு ; கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
|
|
எண்டிசை
|
எட்டுத்திக்கு ; கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
|
|
எண்டோளன்
|
எட்டுத் தோள்களுடையோன் ; சிவன் ; திருமால் .
|
|
எண்டோளி
|
எட்டுக் கைகளையுடையாள் , காளி ; கொற்றவை , துர்க்கை .
|
|
எண்ணக்குறிப்பு
|
நோக்கம் .
|
|
எண்ணங்குலைதல்
|
மனம் கலங்குதல் ; எண்ணம் வீணாதல் ; மதிப்புக்கெடுதல் .
|
|
எண்ணங்கொண்டிருத்தல்
|
நோக்கங்கொண்டிருத்தல் ; நம்பி எதிர்பார்த்தல் ; கவலைப்படுதல் ; சிந்தித்தல் .
|
|
எண்ணத்தப்பு
|
நினைவு மயக்கம் ; மதிகேடு ; மதியாமை ; ஏமாறுகை ; கெட்ட எண்ணம் .
|
|
எண்ணத்தவறு
|
நினைவு மயக்கம் ; மதிகேடு ; மதியாமை ; ஏமாறுகை ; கெட்ட எண்ணம் .
|
|
எண்ணப்படுதல்
|
கணிக்கப்படுதல் , மதிக்கப்படுதல் .
|
|
எண்ணம்
|
நினைப்பு ; நோக்கம் ; நாடிய பொருள் ; மதிப்பு ; இறுமாப்பு ; நம்பிக்கை ; சூழ்ச்சி ; கவலை ; கருத்து ; ஆலோசனை ; குறிப்பு ; கணிதம் .
|
|
எண்ணர்
|
மந்திரியர் ; கணிதர் ; தருக்கம் செய்பவர் .
|
|
எண்ணல்
|
தேர்ச்சி ; கருத்து ; கணக்கிடுகை ; எண்ணலளவை ; ஆலோசனை ; எண்ணுதல் ; நினைத்தல் ; குறித்தல் ; மதித்தல் ; இறுமாத்தல் ; கணக்கிடுதல் ; கவலைப்படல் .
|
|
எண்ணலங்காரம்
|
ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி .
|
|
எண்ணலர்
|
எண்ணார் , மதியாதவர் , பகைவர் .
|
|
எண்ணலளவை
|
இலக்கத்தால் எண்ணும் அளவு .
|
|
எண்ணலார்
|
காண்க : எண்ணலர்
|
|
எண்ணவி
|
நல்லெண்ணெய் .
|
|
எண்ணாட்டிங்கள்
|
எட்டாம் பிறை , அட்டமிச் சந்திரன் .
|
|
எண்ணாதகண்டன்
|
துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் .
|
|
எண்ணாதநெஞ்சன்
|
துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் .
|
|
எண்ணாதவன்
|
எதனையும் ஆராய்ந்து பாராதவன் ; எதனையும் பொருட்படுத்தாதவன் ; கவலையற்றவன் .
|
|
எண்ணாப்பு
|
இறுமாப்பு .
|
|
எண்ணிக்கை
|
எண் ; கணிப்பு ; மதிப்பு ; எச்சரிக்கை .
|
|
எண்ணிடுதல்
|
கணக்கிடுதல் .
|
|
எண்ணிடைச்சொல்
|
எண்ணுப் பொருளைக் காட்டும் இடைச்சொல் ; உம் , ஏ முதலியன .
|
|
எண்ணியற்பெயர்
|
எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர் .
|
|
எண்ணியார்
|
எண்ணங்கொண்டவர் , நோக்கங் கொண்டவர் .
|
|
எடுபாடு
|
செல்வாக்கு ; பகட்டு ; உயர்ச்சி , மேட்டிமை ; நிலையின்மை ; குலைவு ; அழிகை .
|
|
எடுபிடி
|
முயற்சி ; விருது ; மதிப்பு ; குற்றேவலாள் .
|
|
எடுவுதல்
|
எடுத்தல் .
|
|
எடை
|
எடுத்தல் , தூக்குதல் ; நிறை ; நிறுக்கை , நிறையிடல் ; எழுப்புகை ; மிகுதல் .
|
|
எடைக்கட்டு
|
நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவு நிறை , எடைகட்டுதல் .
|
|
எண்
|
எண்ணிக்கை ; கணக்கிடுதல் ; எண்ணம் ; ஆலோசனை ; அறிவு ; மனம் ; கவலை ; மதிப்பு ; இலக்கம் ; கணக்கு ; சோதிடநூல் ; இலக்கியம் ; வரையறை ; தருக்கம் ; மாற்று ; மந்திரம் ; அம்போதரங்கம் ; எளிமை ; வலி ; எள் .
|
|
எண்
|
(வி) எண் என்னும் ஏவல் ; நினை , கருது .
|
|
எண்கண்ணன்
|
பிரமன் .
|
|
எண்காற்புள்
|
சிம்புள் , சரபப்பறவை .
|
|
எண்கு
|
கரடி .
|
|
எண்குணத்தான்
|
எட்டுக் குணங்களையுடைய கடவுள் ; அருகன் ; சிவன் .
|
|
எண்குணம்
|
கடவுளின் எட்டுக் குணங்கள் ; தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமுடைமை .
|
|
எண்குணன்
|
காண்க : எண்குணத்தான்
|
|
எண்குற்றம்
|
அறிவைக் கெடுக்கும் எட்டுவகைக் குற்றங்கள் ; இவற்றைச் சமணர் ஞானா வரணீயம் , தரிசனாவரணீயம் , வேதநீயம் மோகநீயம் , ஆயு ; நாமம் , கோத்திரம் , அந்தராயம் என்று குறிப்பிடுவர் .
|
|
எண்கோணம்
|
எட்டுக்கோணம் ; எட்டுமூலையையுடைய உருவம் .
|
|
எண்கோவை
|
காஞ்சி என்னும் அரையணி .
|