| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
உரோமண்டலி
|
நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று .
|
|
உரோமத்துவாரம்
|
மயிர்க்கால் ,மயிர்த்துளை .
|
|
உரோமப்பொடிப்பு
|
மயிர்ச்சிலிர்ப்பு .
|
|
உரோமபுளகம்
|
மயிர்ச் சிலிர்ப்பு .
|
|
உரோமபுளகிதம்
|
மயிர்ச் சிலிர்ப்பு .
|
|
உரோமம்
|
மயிர்ப்பரப்பு ; புறமயிர் .
|
|
உரோமரேகை
|
மயிரொழுக்கு .
|
|
உரைசெய்யல்
|
சொல்லுதல் ; விளக்கவுரை தரல் .
|
|
உரைஞ்சுதல்
|
காண்க : உரைசுதல் .
|
|
உரைத்தல்
|
ஒலித்தல் ; சொல்லுதல் ; தேய்த்தல் ; மாற்றறியத் தேய்த்தல் ; மெருகிடுதல் ; பூசுதல் .
|
|
உரைத்தாம் என்றல்
|
நூல் உத்திகள் முப்பத்து இரண்டனுள் ஒன்று , முன்னே கூறியுள்ள ஒரு செய்தி பின்னரும் வருமிடத்து முன்னர்ச் சொல்லியமை சுட்டல் .
|
|
உரைத்தீவார்
|
கூறுவார் .
|
|
உரைத்தும் என்றல்
|
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு செய்தியைப் பின்னர் ஏற்ற இடத்தில் விளக்குவோம் எனக் குறித்தல் .
|
|
உரைதல்
|
தேய்தல் ; வீணாதல் .
|
|
உரைநடை
|
பேச்சுநடை ; வசனநடை .
|
|
உரைநூல்
|
உரை எழுதப்பெற்ற நூல் ; உரையாகிய நூல் .
|
|
உரைப்பாட்டு
|
உரைச் செய்யுள் ; கட்டுரைநடை .
|
|
உரைப்பு
|
தேய்ப்பு ; மாற்றறிய உரைக்கை ; சொல்லுகை .
|
|
உரைப்பொருள்
|
விரித்துரைக்கும் மெய்யுரை .
|
|
உரைபாடம்
|
மூலமும் உரையும் .
|
|
உரைபெறுகட்டுரை
|
காப்பியங்களுள் உரைநடையில் அமைந்த தொடர் .
|
|
உரைமானம்
|
தேய்ப்பு .
|
|
உரைமுடிவு
|
முறைத் தீர்ப்பு ; நியாயத் தீர்ப்பு .
|
|
உரையசை
|
பெரும்பான்மை ஆற்றலிழந்த இடைச்சொல் .
|
|
உரையசைக்கிளவி
|
ஒருவனை எதிர்முகமாக்கும் சொல் .
|
|
உரையல்
|
உரைத்தல் ; தேய்தல் ; சொல்லுகை .
|
|
உரையளவை
|
நூற்சான்று .
|
|
உரையாசிரியர்
|
நூலுக்கு உரை செய்வோர் ; தொல்காப்பிய முதல் உரைகாரர் எனப்படும் இளம்பூரணர் .
|
|
உரையாடுதல்
|
பேசுதல் ,சொல்லுதல் ; ஒருவர்க்கொருவர் உரையாடல் ; ஒரு பொருள் பற்றிச் சிலர் கலந்து பேசுகை .
|
|
உரையாணி
|
மாற்றறியும் அணி .
|
|
உரையிடுதல்
|
நூலுக்கு உரை செய்தல் ; ஒருவர்க்கொருவர் தருக்கஞ் செய்தல் .
|
|
உரையிலக்கணம்
|
நூலுரைக்கு வேண்டும் இலக்கணம் : பாடம் , கருத்து , சொல்வகை , சொற்பொருள் , தொகுத்துரை , உதாரணம் , வினா , விடை , விசேடம் , விரிவு ,அதிகாரம் , துணிவு , பயன் , ஆசிரியவசனம் எனப் பதினான்கு வகைத்து .
|
|
உரையிற்கோடல்
|
மூலத்திற் சொல்லாதவற்றை உரையில் சொல்லும் ஓர் உத்தி .
|
|
உரையேடு
|
காண்க : உரைபாடம் .
|
|
உரைவன்மை
|
பேச்சுவல்லமை .
|
|
உரைவாணன்
|
உரை கூறவல்ல புலவன் .
|
|
உரைவு
|
தேய்வு .
|
|
உரொக்கம்
|
கையிருப்புப் பணம் .
|
|
உரோகதி
|
நாய் .
|
|
உரோகம்
|
நோய் ; தளிர் ; பூவரும்பு ; ஏறுகை ; உயர்தல் ; இறங்குகை ; ஒளியின்மை .
|
|
உரோகிணி
|
உரோகிணி நாள் , நான்காம் நட்சத்திரம் ; பலராமன் தாய் ; கடுகுரோகிணி ; பீதரோகிணி ; கடுக்காய் ; ஒன்பான் ஆண்டுப்பெண் ; பெருங்குமிழ் .
|
|
உரோகிணி புதல்வன்
|
பலராமன் .
|
|
உரோகிதம்
|
செந்நிறம் ; செம்மரம் ; மஞ்சள் ; குங்குமம் ; இந்திரவில் .
|
|
உரோங்கல்
|
உலக்கை .
|
|
உரோசம்
|
மானம் ; சினம் ; வெட்கம் ; முலை .
|
|
உரோசனகம்
|
எலுமிச்சை .
|
|
உரோசனம்
|
முள்ளிலவு ; கோரோசனம் .
|
|
உரோசனி
|
கடுகு ; செந்தாமரை .
|
|
உரோசனை
|
கோரோசனை ; செந்தாமரை ; கடுகு .
|
|
உரோஞ்சுதல்
|
காண்க : உரிஞ்சுதல் .
|
|
உரோடணம்
|
இதன் ; பாதரசம் ; உவர்நிலம் .
|
|
உரோடம்
|
சினம் .
|
|
உரோணி
|
உரோகிணி ; ஒருவகை நோய் .
|
|
உரோதம்
|
நீர்க்கரை ; தடை .
|
|
உரோதனம்
|
அழுதல் ; அழுகை .
|
|
உரோதனி
|
சிறுகாஞ்சொறி .
|
|
உரோதனை
|
தொந்தரவு ; அழுகை .
|
|
உரோதித்தல்
|
அழுதல் .
|
|
உரோபம்
|
அம்பு .
|
|
உரோமக்கட்டு
|
நிறைமயிர் , மயிரடர்த்தி .
|
|
உரோமக்கிழங்கு
|
வசம்பு .
|
|
உரோமகூபம்
|
மயிர்ச்சிலிர்ப்பு , உரோம புளகம் .
|
|
உரைகோளாளன்
|
உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன் .
|
|
உரைச்சூத்திரம்
|
உரையினிடையே உரைகாரர் ஒரு கூறாக இயற்றிய நூற்பா .
|
|
உரைச்செய்யுள்
|
கட்டுரை ; உரைப்பாட்டு .
|
|
உரைசல்
|
உரைசுதல் ; உராய்கை ; தேய்கை .
|
|
உரைசுதல்
|
உரிஞ்சுதல் ; தேய்தல் ; தேய்த்தல் .
|