| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அட்சம்
|
உருத்திராக்கம் ; கண் ; பூகோள இடக்கணக்கு .
|
|
அட்சய
|
அறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு .
|
|
அட்சயதூணி
|
அம்பு குறைவின்றி இருக்கும் உறை ; அருச்சுனன் அம்புக் கூடு .
|
|
அட்சயபாத்திரம்
|
இரக்கும் கலன் ; அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம் .
|
|
அட்சயம்
|
கேடின்மை , அழியாத் தன்மை .
|
|
அட்சயன்
|
அழிவற்றவன் , அமரன் , கடவுள் .
|
|
அட்சரகணிதம்
|
இயற்கணிதம் ; எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை .
|
|
அட்சரசுத்தி
|
எழுத்துத் திருத்தம் ; ஒலிப்புத் திருத்தம் .
|
|
அட்சரதேவி
|
கலைமகள் .
|
|
அட்சரம்
|
காண்க : அக்கரம் .
|
|
அட்சரன்
|
காண்க : அக்கரன் .
|
|
அட்சராப்பியாசம்
|
எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் .
|
|
அட்சராரம்பம்
|
எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் .
|
|
அட்சாம்சம்
|
பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி .
|
|
அட்சி
|
கண் ; கண்ணுடையாள் .
|
|
அட்டக்கரி
|
மிகவும் கறுப்பு .
|
|
அட்டக்கறுப்பு
|
மிகவும் கறுப்பு .
|
|
அட்டகம்
|
எட்டன் கூட்டம் , எட்டன் தொகுதி கொண்டது ; சிற்றிலக்கியங்களுள் ஒன்று .
|
|
அட்டகருமக்கரு
|
மாயவித்தைக் கூட்டுச்சரக்குகள் .
|
|
அட்டகாசம்
|
பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் .
|
|
அட்டகிரி
|
எட்டுமலைகள் ; அவை : இமயம் , மந்தரம் கயிலை , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலம் , கந்தமாதனம் .
|
|
அட்டகுணம்
|
காண்க : எண்குணம் .
|
|
அஞ்சனம்
|
மை ; கண்ணுக்கிடும் மை ; கறுப்பு ; இருள் ; ஆணவமலம் ; திசையானை எட்டனுள் மேற்றிசையானை .
|
|
அஞ்சனவண்ணன்
|
கருநிறத்தன் ; திருமால் .
|
|
அஞ்சனவித்தை
|
மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது .
|
|
அஞ்சனவெற்பு
|
திருவேங்கடமலை .
|
|
அஞ்சனா
|
விளைச்சல் மதிப்பீடு .
|
|
அஞ்சனாதார்
|
விளைச்சலை மதிப்பிடுபவர் .
|
|
அஞ்சனாவதி
|
வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை .
|
|
அஞ்சனி
|
காயாமரம் ; நாணற்புல் .
|
|
அஞ்சனை
|
அனுமன் தாய் ; வடதிசை யானைக்குப் பெண்யானை .
|
|
அஞ்சாமை
|
பயப்படாமை , திண்மை .
|
|
அஞ்சாரப்பெட்டி
|
காண்க : அஞ்சறைப்பெட்டி .
|
|
அஞ்சி
|
தபால் ; அதியமான் நெடுமான் அஞ்சி ; தலைவன் .
|
|
அஞ்சிக்கை
|
அச்சம் .
|
|
அஞ்சிகம்
|
கண் , விழி , நாணயம் .
|
|
அஞ்சித்தல்
|
பூசை புரிதல் ; அடைதல் .
|
|
அஞ்சிதம்
|
உண்டாதல் ; தலை சாய்த்தல் ; நல்லறிவு ; பூசித்தல் ; பொருந்தல் ; வணக்கம் .
|
|
அஞ்சிதமுகம்
|
வருத்தம் பொறாது இருதோள் மீது தலை சாய்த்தல் .
|
|
அஞ்சில்
|
அழகிய தகட்டு வடிவான பொன் அணிகலன் .
|
|
அஞ்சிலோதி
|
அழகிய சிலவாகிய கூந்தல் .
|
|
அஞ்சு
|
ஐந்து ; அச்சம் ; ஒளி .
|
|
அஞ்சுகம்
|
கிளி .
|
|
அஞ்சுதகுதல்
|
அச்சமுண்டாதல் .
|
|
அஞ்சுதல்
|
பயப்படுதல் .
|
|
அஞ்சுபதம்
|
காண்க : அஞ்செழுத்து .
|
|
அஞ்சுபயம்
|
குடிகளுக்கு அரசனாலும் , அவன் உறவினராலும் பகைவராலும் திருடராலும் , விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாகும் ஐவகை அச்சம் ,
|
|
அஞ்சுமாலி
|
சூரியன் .
|
|
அஞ்சுமான்
|
சூரியன் .
|
|
அஞ்சுருவாணி
|
காண்க : அச்சாணி .
|
|
அஞ்சுவர்ணத்தோன்
|
துத்தநாகம் ; ஐந்துவகையான நிறங்கொண்டவன் .
|
|
அஞ்செவி
|
அகஞ்செவி , உட்செவி ; அழகியகாது .
|
|
அஞ்செழுத்து
|
பஞ்சாக்கரம் , ' நமசிவாய ' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் .
|
|
அஞ்ஞதை
|
அறியாமை .
|
|
அஞ்ஞன்
|
அறிவில்லாதவன் .
|
|
அஞ்ஞாதசுகிருதம்
|
தன்னை அறியாமல் வந்த புணணியம் .
|
|
அஞ்ஞாதம்
|
பிறர் அறியாமை , மறைவு , அறியப்படாதது .
|
|
அஞ்ஞாதவாசம்
|
பிறிர் அறியாமல் மறைந்து வாழ்தல் .
|
|
அஞ்ஞானம்
|
அறிவின்மை ; ஆணவமலம் .
|
|
அஞ்ஞானி
|
அறிவிலி .
|
|
அஞ்ஞை
|
அன்னை , தாய் , அறிவில்லான் .
|
|
அஞர்
|
துன்பம் ; நோய் ; சோம்பல் ; வழுக்கு நிலம் ; அறிவிலார் .
|
|
அஞல்
|
கொசு ; மின்மினி ; நுளம்பு .
|
|
அஞலம்
|
கொசு ; மின்மினி ; நுளம்பு .
|
|
அஞன்
|
காண்க : அஞ்ஞன் .
|
|
அட்கெனல்
|
கடிய ஓசைக் குறிப்பு .
|
|
அட்சதை
|
அக்கதை ; மங்கலவரிசி , அறுகரிசி ; வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி .
|