| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
இயன்மொழிவாழ்த்து
|
தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை .
|
|
இயனம்
|
கள்ளிறக்குவோனது கருவிபெய்புட்டில் .
|
|
இயனெறி
|
நல்லொழுக்கம் .
|
|
இயாகதம்
|
சிற்றகத்தி .
|
|
இயாகம்
|
கொன்றை ; பாண்டம் ; வேள்வி .
|
|
இயுசாவியம்
|
கொன்றைமரம் .
|
|
இயேசு
|
கிறிஸ்துநாதரின் பெயர் .
|
|
இயை
|
அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை .
|
|
இயை
|
(வி) சேர் .
|
|
இயைத்தல்
|
பொருத்துதல் .
|
|
இயைதல்
|
பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் .
|
|
இயைந்துரை
|
பல பொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி .
|
|
இயைபிலிசைக்குறி
|
இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் .
|
|
இயைபின்மை நீக்கம்
|
தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன .
|
|
இயைபின்மை நீக்கல்
|
தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன .
|
|
இயைபின்மையணி
|
பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி .
|
|
இயைபு
|
சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று .
|
|
இயைபுத்தொடை
|
ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
|
|
இயைபுருவகம்
|
பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று .
|
|
இயைபுவண்ணம்
|
இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் .
|
|
இயைபுவனப்பு
|
ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல் .
|
|
இயைபுளன்
|
புகழாளன் .
|
|
இயைமே
|
வாழைமரம் .
|
|
இயைய
|
ஓர் உவம உருபு .
|
|
இயைவது
|
தக்கது .
|
|
இயைவு
|
இணக்கம் ; பொருத்தம் ; சேர்க்கை .
|
|
இர்
|
முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் .
|
|
இர
|
இரவு ; இரத்தல் .
|
|
இரக்கக்குறிப்பு
|
ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி .
|
|
இரக்கம்
|
அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு .
|
|
இரக்கித்தல்
|
காண்க : இரட்சித்தல் .
|
|
இரக்கை
|
காண்க : இரட்சை .
|
|
இரகசியம்
|
கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் .
|
|
இரகிதம்
|
இட்டம் ; விடப்பட்டது ; நீக்கப் பட்டது .
|
|
இரகுநாதன்
|
இரகு குலத்தில் சிறந்த இராமன் .
|
|
இரகுவமிசம்
|
இரகுவின் வழிவந்தவர் ; ஒரு தமிழ் நூல் .
|
|
இரங்கல்
|
அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை .
|
|
இரங்கற்பா
|
ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை .
|
|
இரங்குகெளிறு
|
கெளிற்று மீன்வகை .
|
|
இரங்குசொல்
|
இழுமென இசைக்கும் சொல் .
|
|
இரங்குதல்
|
வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் .
|
|
இரங்கூன்மல்லி
|
ஒருவகைப் பூங்கொடி .
|
|
இரங்கொலி
|
முறையீடு .
|
|
இரங்கேசன்
|
அரங்கநாதன் ; திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் கடவுள் .
|
|
இயற்பலகை
|
சங்கப் பலகை .
|
|
இயற்பழித்தல்
|
தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை .
|
|
இயற்பா
|
இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி .
|
|
இயற்பெயர்
|
வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் .
|
|
இயற்றமிழ்
|
செந்தமிழ் ; இலக்கியத் தமிழ் ; முத்தமிழுள் ஒன்று .
|
|
இயற்றல்
|
செய்தல் ; முயற்சி .
|
|
இயற்றளை
|
காண்க : இயற்சீர்வெண்டளை .
|
|
இயற்றி
|
முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை .
|
|
இயற்றியான்
|
செய்தவன் .
|
|
இயற்று
|
பாத்திரம்
|
|
இயற்றுதல்
|
செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் .
|
|
இயற்றுதற்கருத்தா
|
தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் .
|
|
இயற்றும்வினை
|
தன்வினை .
|
|
இயறல்
|
முத்தி ; போதல் .
|
|
இயன்ஞானம்
|
நல்லறிவு .
|
|
இயன்மகள்
|
கலைமகள் .
|
|
இயன்மணம்
|
இயற்கையான மணம் .
|