தாவரவியல் :: பசுமைப்புரட்சி வித்தகர் பால்

11. நாம் சுதந்திரம் அடைவதற்குமுன் வேளாண்ஆராய்ச்சி என்ன நிலையில் இருந்தது?
வேளாண் ஆராய்ச்சி பின்தங்கிய நிலையில் இருந்தது. பயிர்களை நோய் தாக்கிய வண்ணம் இருந்தது.
12. கோதுமை எந்நோய்க்கு ஆளானது?
துரு நோய்க்கு ஆளானது. இது ஒரு பூஞ்சை நோய். கோதுமை அதிகம் விளைந்தாலும் இந்நோயிலிருந்து அது தப்ப இயலாதவாறு இருந்தது.
13. இந்நிலையில் பால் செய்த முடிவென்ன?
துரு நோயை எதிர்க்கும் பல வகைக் கோதுமைகளை உருவாக்க விரும்பினார்.
14. அவர் உருவாக்கிய புது வகைக் கோதுமை எது?
எபி 700, 800 வரிசை. இவை ஒரு வகைத் துருநோயை எதிர்த்தன.
15. உண்மையான திருப்பம் எப்பொழுது எப்படி ஏற்பட்டது?
1954இல் ஏற்பட்டது. இப்பொழுது இவர் எபி 809 வகைக் கோதுமையை உருவாக்கினார்.
16. இதை உருவாக்க அவர் எவ்வளவு காலம் ஆராய்ச்சி செய்தார்?
அயரா உழைப்பினால் 18 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்தார்.
17. எபி 809 இன் சிறப்பென்ன?
மூன்று துருவகை நோய்கள் உள்ளன. இம்மூன்றையும் இது எதிர்த்தது. இதனால் கோதுமை உற்பத்தி அதிகம் ஏற்பட்டது. இந்த அருஞ்செயலுக்காக உலகம் முழுதும் இவரைப் பாராட்டியது.
18. 1965இல் அவர் அடைந்த உயர் பதவி என்ன?
அப்பொழுதுதான் புதுதில்லியில் இந்தியா வேளாண் ஆராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. அதன் இயக்குநரானார் இவர்.
19. அவர் செய்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி என்ன?
ரோஜாக்களில் அவர் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி செய்துள்ளார். 40க்கு மேற்பட்ட வகைகளை உருவாக்கி உள்ளார். இது குறித்து அவர் ஒரு நூலும் எழுதியுள்ளார். இந்திய ரோஜாக்கள்.
20. அவர் பணியின் சிறப்பென்ன?
இயக்குநராக இருந்தபொழுது, பல நல்ல பணிகளைச் செய்துள்ளார். அதனால் இன்று இந்தியா வேளாண் முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. அவர்தம் திட்டங்களாலும் ஆராய்ச்சிகளாலும் பசுமைப் புரட்சி இந்தியாவில் தோன்றிற்று.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பசுமைப்புரட்சி வித்தகர் பால் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர், ஆராய்ச்சி, கோதுமை, ஏற்பட்டது, வேளாண், வகைக், என்ன

