விஷ்ணு புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
எமதூதன்: ஒருவன் எப்படி விஷ்ணு பக்தன் ஆவது?
யமன்: அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மத்தை யார் மீறுவதில்லையோ, யாருடைய மனத்தில், அகங்காரம், பொறாமை முதலியவை இல்லையோ, யார் பகைவர் நண்பர் என்ற வேறுபாடு பாராட்டாமல் அனைவருடனும் சமத்துவமாக இருக்கிறார்களோ, யார் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறார்களோ, யார் கோபத்தை விட்டொழித்தார்களோ அவர்களே விஷ்ணு பக்தர்கள் ஆவார்கள். ஒயாது விஷ்ணுவை தியானிப்பதால் அவர்கள் வனப்பு வாய்ந்த வடிவத்தைப் பெறுகின்றனர். இதயத்தில் விஷ்ணுவை வைத்துப் பூஜிப்பவர்கள் குற்றம் செய்வதே இல்லை. அத்தகைய பக்தர்கள் பக்கத்தில் செல்லாதே. அப்படிச் சென்றால் வலிமை பொருந்திய விஷ்ணுவின் சக்கரம் உன்னையும் என்னையும் பழி தீர்த்துவிடும்.
நான்கு வர்ணங்கள்
விஷ்ணு பக்தர்கள் என்பவர்கள் விஷ்ணுவால் நியமிக்கப் பட்ட வர்ணாசிரம தர்மங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பர். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆகும். பிராமணர்கள் கடமையாவன : கற்றல், கற்பித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆகும். சத்ரியர்கள் கடமையாவன : கற்றல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் இவற்றோடு தனுர் வேதம் அறிந்து நாட்டைக் காக்கப் போர் புரிதல். அரசனுடைய கடமை தீயவர்களை தண்டிப்பதும், நல்லவர்களைக் காப்பதும் ஆகும். வைசியர்கள் விவசாயம், ஆடுமாடு வளர்த்தல், வாணிபம் என்பவற்றுடன் கற்றல், யாகம் செய்தல், ஈதல் என்பவற்றைச் செய்ய வேண்டும். சூத்திரர்கள் கடமை ஏனைய மூவருக்கும் தொண்டு புரிதல் ஆகும். இவற்றையல்லாமல் சூத்திரர்கள் வாணிபம், கைத்தொழில் என்பவற்றிலும் ஈடுபடலாம். நால்வருக்கும் பொதுவான சில கடமைகளும் உண்டு. அவை யாவன: பிறரிடம் அன்பு பாராட்டல், தூய்மையோடு இருத்தல், கடினமாக உழைத்தல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், நட்புப் பாராட்டல், துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியவை யாகும.
இவற்றையல்லாமல் பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு நிலைகளையும் ஒருவன் மேற்கொள்ள வேண்டும். முதலாவது நிலை பிரம்மசரியம். பூணூல் அணிந்தவுடன் குருவை நாடிச் சென்று அவருடனேயே தங்கி, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தல், குரு உறங்கிய பின் உறங்கி, அவர் எழுமுன் எழுந்து காலைக் கடன்களை முடித்து மலர் தண்ணர் முதலியவற்றைக் கொண்டு வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குருவை மறுத்துப் பேசவோ, எதிர்க்கவோ கூடாது. எல்லாச் சாத்திரங்களையும் கற்ற பிறகு குருதட்சணை கொடுத்துவிட்டு அவரது உத்தரவின்பேரில் கிரகஸ்தனாக ஆக வேண்டும். இதுவே இரண்டாவது நிலை. கிரகஸ்தனானவன் தக்க ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து இல்லறம் நடத்த வேண்டும். புதல்வரைப் பெறுதல், வேள்வி செய்தல், மேலும் கற்றல், விருந்தினர்களை உபசரித்தல் ஆகியவை இதன்பாற்படும். மற்ற நிலைகளைக் காட்டிலும் கிரகஸ்தனின் நிலையே உயர்ந்த தாகும். பிராமணர்களும், பிரம்மசாரிகளும் பிச்சை ஏற்பதை மேற்கொள்ளலாம். மூன்றாவது நிலை வானபிரஸ்தம். நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு ஒருவன் காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம். அவ்வாறு செல்லும்போது மனைவியை அழைத்துக் கொண்டோ அல்லது மகனின் பாதுகாப்பிலோ விட்டுச் செல்லலாம். வானப்பிரஸ்தர்கள் காய் கனி கிழங்குகளை உண்டு, முடியினை வெட்டாது இருத்தல் வேண்டும். தெய்வங்களை வழிபடுவதோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களுக்குத் தன்னிடம் இருப்பதைக்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 9 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், கற்றல், விஷ்ணு, ஆகும், பக்தர்கள், யார், செய்தல், நிலை, ஈதல், ஒருவன், நான்கு

