விஷ்ணு புராணம் - பகுதி 22 - பதினெண் புராணங்கள்
விஷ்ணு புராணத்தின் முடிவுரை
யாதவர்கள் முடிவு பிண்டாரகா என்ற கூேடித்திரத்தில் கண்வர், விஸ்வா மித்திரர், நாரதர் ஆகிய முனிவர்கள் தங்கி இருந்தனர். ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணனின் மகனாகிய சம்பாவிற்குப் பெண் வேஷமிட்டு அம் முனிவரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களைப் பார்த்து முனிவர்களே! இப்பெண்ணுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா?’ என்று கேட்டனர். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இத்திமிர் பிடித்த செய்கையைக் கண்டு, "இவள் பெண் அல்ல, ஆண் இவனுடைய உடம்பில் இருந்து ஒர் இரும்பு உலக்கை தோன்றப் போகிறது. அந்த உலக்கை யாதவ சமுதாயத்தை அழிக்கப் போகிறது” என்று கூறினார். பயந்து போன இளைஞர்கள் அரசர் உக்கிரசேனரிடம் சென்று முறையிட்டனர். முனிவர்கள் சாபத்தை ஒன்றும் மீறமுடிய வில்லை. உரிய காலத்தில் சம்பாவின் உடலில் இருந்து ஒர் இரும்பு உலக்கை வெளியாயிற்று. அரசன் உக்கிரசேனன் அதைக் கண்டு பயந்து அந்த இரும்பு உலக்கையைப் பொடிப் பொடியாகத் தூள் செய்து சமுத்திரக் கரையில் தூவி விட்டான். முழுவதும் பொடியானாலும் ஒரு சிறு பகுதியைப் பொடி செய்யவே முடியவில்லை. அந்தச் சிறு துண்டைக் கடலுக்குள் வீசி எறிந்து விட்டான். கடற்கரையில் தூவப்பட்ட அச்சிறு துகள்கள் மிகக் கூர்மையான- வலிமையுடைய கோரைகளாக முளைத்தன. அக்கோரைகள் முளைத்த இடத்தில் பிரபஸ்சா என்ற க்ஷேத்திரம் அமைந்திருந்தது. ஒருமுறை யாதவர்கள் அனைவரும் இந்த ஸ்தலத்தில் வழிபாட்டிற்காகக் கூடினர். இவர்களுள் ஒருவனான உத்தவா என்பவன் மட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் “கந்தமாதனம்' என்ற மலையில் தவஞ்செய்யச் சென்று விட்டான். அவனைத் தவிர கூடியிருந்த யாதவர்கள் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்துக் களித்தனர். எல்லை மீறிக் குடித்ததன் விளைவாக அறிவை இழந்து தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர். கைச்சண்டை முற்றி இரும்புப் பொடியில் இருந்து முளைத்த கோரையைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்துவிட்டனர். கிருஷ்ணனும், அவன் நண்பன் தாருகனும் எவ்வளவு முயன்றும் இச் சண்டையை நிறுத்த முடியவில்லை. இறுதியில் இவர்கள் இருவர், எங்கோ அமர்ந்திருந்த பலராமன் தவிர யாரும் மிஞ்சவில்லை. யாதவர்களின் மிகப் பெரும் பகுதி இவ்வாறு அழிந்துவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணனும், தாருகனும் பலராமனைத் தேடிச் சென்றனர். பலராமன் பக்கத்தில் சென்றதும் ஒர் அதிசயக் காட்சி நடைபெற்றது. பலராமன் வாயில் இருந்து ஒரு மிகப் பெரிய பாம்பு வெளிப்பட்டுக் கடலுக்குள் சென்றது. தங்களுடைய முடிவை அறிந்து கொண்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்துப் பின்வருமாறு பேசினான்: "தாருகா! பலராமன் முடிந்தபிறகு என்னுடைய காலமும் நெருங்கி விட்டதை அறிகிறேன். நீ துவாரகைக்குச் சென்று மன்னர் உக்கிரசேனரிடம் நான் சொன்னதைச் சொல்வாயாக. இங்கு வந்த யாதவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் நானும் சென்று விடுவேன். நான் சென்ற பிறகு துவாரகையைக் கடல் பொங்கி எழுந்து மூடிவிடும். அதற்குள் ஒடிச்சென்று அருச்சுனனை அழைத்து வா. துவாரகையில் எஞ்சி இருக்கிற யாதவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு அருச்சுனனுக்குச் சொல்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 22 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பலராமன், சென்று, இருந்து, யாதவர்கள், விட்டான், அனைவரும், அவன், உலக்கை, இரும்பு, முனிவர்கள்

