விஷ்ணு புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான். இது ஆயிரம் வருடங்கள் நடைபெற்றது. நிமி ஆயிரம் வருடங்கள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தைச் செய்ய விரும்பினான். அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டுமென்று கேட்டான். ஐந்நூறு வருடங்கள் நடைபெறும் ஒரு யாகத்தை இந்திரன்,தெய்யப்போவதாகவும். அதற்குத் தலைவனாகத் தான் இருக்க வேண்டியிருப்பதால் அதுமுடிந்த பின்னர் நிமியின் யாகத்தை நடத்தலாம் என்றும் வசிட்டன் கூறினான். அதைக் கேட்டுக் கொண்டு பதில் ஒன்றும் சொல்லாமல் வந்த நிமி, ஐந்நூறு வருடங்கள் காத்திருக்க விரும்பாமல் தன் யாகத்தைத் தொடங்க விரும்பினான். கெளதம முனிவரைத் தலைவராக வைத்துக்கொண்டு மற்ற முனிவர்களையும் வைத்துக் கொண்டு நிமி யாகத்தை நடத்தி னான். இந்திரனுடைய யாக்த்தை முடித்துக்கொண்டு நிமியின் யாகத்தைத் தொடங்கலாம் என்று வசிட்டன் நிமியிடம் வந்தான். கெளதமனைத் தலைவனாகக் கொண்டு நிமியின் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தன்னைக் கேட்டு தான் சொல்லியபடி நடவாததால் நிமி தன்னை அவமானப்படுத்தி விட்டான் என்ற கோபத்தினால், வசிட்டன் நிமியின் பூதவுடல் இல்லாமல் போகட்டும் என்று சபித்தான். நிமியும் வசிட்டன் கோபம் நியாயமற்றது என்று நினைத்து வசிட்டனுடைய பூதவுடல் இல்லாமல் போதட்டும் ஒன்று சபித்தான். இரண்டு பேரின் பூதவுடல்களும் இல்லாமல் போயின. ஆனால் வருணன் முதலிய தேவர்கள் தயவால் வசிட்டனுக்கு உடனே வேறொரு உடல் கிடைத்தது. நிமியின் உட்லைத் தைலத்தில் போட்டு வைத்திருந்தார்கள். அவ்னுடைய யாகம் முடிந்தவுடன் முனிவர்கள் அவன் உடம்பில் மறுபடியும் அவன் உயிரைச் செலுத்த விரும்பினார்கள். ஆனால், அது தேவையில்லை என்று கூறிவிட்ட நிமி அதற்குப் பதிலாக ஒவ்வொருவருடைய கண் இமையிலும் தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவ்வாறே முனிவர்கள் தந்தார்கள். கண் புருவம் அடிக்கடி கண்ணை மூடுவதால் நிமியின் செயல் அதுவாதலால், நிமிஷம் என்ற சொல்லும் பிறந்தது. நிமிக்குப் பிள்ளைகள் இல்லாததால் ராஜ்ஜியத்தை ஆள ஒருவரும் இல்லை. இதை அறிந்த முனிவர்கள் நிமியின் உடலைப் பொடி செய்தார்கள். அந்தப் பொடியிலிருந்து தோன்றிய பிள்ளைக்கு ஜனகன் என்று பெயர் வந்தது. அவன் தந்தைக்கு உடம்பு இல்லாததால் ஜனகனுக்கு வைதேகன் என்ற பெயரும் வந்தது. ஜனகன் யாகம் செய்வதற்காகப் பூமியை உழுதான். உழுபடைச்சாலில் இருந்து ஒரு பெண் மகவு வெளி வந்தது. அப்பெண்ணே சீதையாவாள்.
விசுவாமித்திரர், ஜமதக்கினி கதை
ஜானுவின் மகனான கதி என்ற அரசனுக்குச் சத்தியவதி என்ற மகள் பிறந்தாள். ரிஷிகா என்ற முனிவன் சத்தியவதியை மணந்து கொள்ள விரும்பினான். ஒரு கிழட்டு முனிவனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத கதி அதை நேரிடையாகச் சொல்ல அஞ்சினான். எனவே உடம்பு முழுவதும் வெள்ளையும், கரிய நிறமுடைய காதுகளும் உடைய ஆயிரம் குதிரைகளைப் பரிசாகத் தந்தால் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினான். முனிவனால் குதிரைகளைச் சேகரிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் அரசன் இதைச் சொன்னான். ஆனால் முனிவன் வருணனை வேண்டி இந்த ஆயிரம் குதிரைகளையும் பெற்றுவிட்டான். குதிரைகளைக் கண்ட மன்னன் வேறு வழியில்லாமல் தன் மகளை முனிவன் ரிஷிகாவிற்கு மணம் செய்து கொடுத்தான்.
சத்தியவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென்று முனிவனைக் கேட்டுக் கொண்டாள். முனிவர் ஒரு யாகம் செய்து அதில் கிடைத்த ஒரு கிண்ணம் பாயசத்தைச் சத்திய வதியிடம் தந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சத்திய வதியின் தாயார் தனக்கும் ஒரு ஆண் மகவு வேண்டும் என்று மருமகனிடம் வேண்டிக் கொண்டார். மறுபடியும் ஒரு கிண்ணம் பாயசத்தை வரவழைத்த முனிவர் இரண்டு கிண்ணங்களையும் சத்தியவதியிடம் கொடுத்து. இது உன் தாய்க்கு இது உனக்கு என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் சென்று விட்டார்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 13 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நிமியின், நிமி, யாகம், ஆயிரம், வசிட்டன், வருடங்கள், அவன், வந்தது, முனிவன், முனிவர்கள், கொண்டு, தான், விரும்பினான், யாகத்தை, இல்லாமல்

