ஸ்கந்த புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை சிவனிடத்தில் ஓர் அற்புதமான கனி யாரோ கொடுத்திருந்தார்கள். கணேசன், ஸ்கந்தன் ஆகிய இரு பிள்ளைகளும் தந்தையிடம் வந்து அப்பழத்தைக் கேட்க சிவன் ஒரு சோதனை வைத்தான். "உங்கள் இருவரில் யார் உலகம் முழுவதையும் முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்கே இப்பழம் உரியது” என்றார். ஸ்கந்தன் உலகைச் சுற்றி வரப் புறப்பட்டான். ஆனால் கணேசர் அருணாசல மலையைச் சுற்றி வந்தால் உலகைச் சுற்றி வந்ததற்கு ஒப்பாகும் என்று கூறி அம்மலையைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். அருணாசலத்திற்குச் சோணாசலம் என்ற பெயரும் உண்டு.
வேங்கடாஜல தீர்த்தம்
இக்கதைகளில் வரும் தீர்த்தா என்ற சொல் தண்ணிரைக் குறிப்பதோடு யாத்திரை செய்வதற்குரிய புண்ணிய ஸ்தலங்களையும் குறிக்கும்.
விஷ்ணுவின் அவதாரமாகிய வராக அவதாரத்தில் வராகம் பிருத்வி எனப்படும் பூமி தேவிக்கு வேங்கடாசல தீர்த்தத்தின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளது. வேங்கடாசலத்தைச் சுற்றிப் பல தீர்த்தங்கள் உள்ளன. குமாரதாரா என்ற தீர்த்தத்தின் கரையில் ஸ்கந்தன் தேவ சேனாவுடன் பல காலம் வாழ்ந்தார்.
பாரத்வாஜ முனிவர் அர்ஜூனனிடம் வேங்கட மலையின் பெருமையைப் பின்வரும் கதையின் மூலம் எடுத்து விளக்கினார்.
ஒரு ராட்சசனின் மகனாகிய அஞ்சனா என்பவள் கேசரி என்ற வானரத்தை மணந்து நீண்டகாலம் மகப்பேறு இல்லாமல் இருந்தாள். எத்தனையோ விரதங்கள் இருந்தும், தீர்த்தங்களில் மூழ்கியும் அவள் எண்ணம் ஈடேறவில்லை. விஷ்ணு பக்தராகிய மதங்க முனிவர் அஞ்சனாவைப் பார்த்து நீ வேங்கடாசல மலை மீது ஏறி அங்கு உன் தவத்தை மேற்கொண்டால் உனக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும் என்றார். அதன்படியே அஞ்சனா, மலையின் உச்சியில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தாள். தவத்தின் இறுதியில் வாயுதேவன் தோன்றி, உனக்கு நானே மகனாகப் பிறக்கப் போகிறேன் என்று கூறினான். அவ்வாறு பிறந்தவனே இராம பக்தனாகிய அனுமன் என்பதை யாவரும் அறிவர்.
'இந்த வேங்கட மலையில்தான் ஹைஹய அரசனாகிய சங்காவிற்கு, விஷ்ணு தரிசனம் தந்தார் என்று பரத்வாஜ முனிவர் அர்ச்சுனனுக்குக் கூறினார்.
புருஷோத்தம க்ஷேத்திரம்
பூரி ஜெகன்னாதர் ஆலயத்தை இந்திரத்துய்மன் என்ற மன்னன் நிறுவியது பற்றி விஷ்ணு புராணத்தில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் வளர்ந்துள்ள மரத்தை வெட்டி எடுத்து, சிலைகள் செய்க என்று இந்திரத்துய்மன் கனவில் கண்டதாகவும், மறுநாள் மரத்தை வெட்டப் போகும் போது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் பிராமணன் வடிவில் வந்து சிலைகளைச் செய்ததாகவும் விஷ்ணு புராணக் கதை சொல்லிச் செல்கிறது. அந்தக் கதை, மரத்தை வெட்டுவதி லிருந்து ஸ்கந்த புராணத்தில் வேறுவிதமாகச் சொல்லப் படுகிறது. அது கீழே தரப்பட்டுள்ளது.
இந்த மரத்தைப் பற்றி நாரதர், இம்மரம் விஷ்ணுவின் உடம்பில் உள்ள ஒரு ரோமத்தின் வடிவாகும். இதைக் கொண்டு சிலைகள் செய்க என்று கூறிவிட்டனர். மரத்தை வெட்டி, விஷ்ணு சிலையை யார் செய்வது என்று அரசன் வினா எழுப்பிய பொழுது, அசரீரி மூலம் அவனுக்கு விடை கிடைக்கிறது. சிறிது நேரத்தில் கிழட்டு மரத் தச்சன் வருவான். அவனை இந்தக்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 16 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, சுற்றி, மரத்தை, ஸ்கந்தன், முனிவர், மலையின், வந்து

