ஸ்கந்த புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
தொண்ணூற்றொன்பது யாகம் செய்த பலி, சுக்ராச்சாரியாரின் ஏவலில் நூறாவது யாகத்தைத் தொடங்கினான்.
(பாகத்தில் வாமனன் வந்ததும், மூன்றடி மண் கேட்க சுக்ராச்சாரி, இவன் விஷ்ணு, ஆகவே இவனுக்குக் கொடுக்காதே என்று சொன்னதும், முன்னர் பல புராணங் களிலும் வந்துள்ளது,) இதற்கு மேல் ஸ்கந்த புராணம் புதுமையான சில செய்திகளைக் கூறுகிறது.
சுக்ராச்சாரி சொன்னதும் பலி, வந்திருப்பது விஷ்ணு என்பதை நான் நன்கு அறிவேன். அவன் எனக்கு விடுதலை நல்கவே வந்திருக்கிறான். ஆகவே அவன் கேட்ட மூன்றடி நிலத்தைத் தரத்தான் போகிறேன்’ என்று கூறினான். சுக்ராச்சாரி மிகுந்த கோபத்துடன் யாகசாலையை விட்டுப் போய்விட்டார். வாமனன் விரும்பியபடியே பலி தாரை வார்த்துக் கொடுத்தான். வாமனன் வளர்ந்து பூமியையும், ஆகாயத்தையும் இரண்டடிகளால் அளந்த பிறகு தன்னுடைய உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, பலியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். இப்பொழுது விஷ்ணு தான் ஒன்றும் பேசாமல் கருடனை அழைத்தார். அங்கே வந்த கருடன் பலியைப் பார்த்து, விஷ்ணுவின் மூன்றாவது அடிக்கு இடமெங்கே, நீ உன் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்று சொல்லிக் கயிற்றால் பலியை இறுக்கக் கட்டிவிட்டான் கருடன். இதை அறிந்த பலியின் மனைவி விந்தியவலி அங்கே வந்து கருடனைப் பார்த்து, என் கணவன் கொடுத்த வாக்கை மீறமாட்டான். உனக்கு வேண்டியது மூன்றாவது அடியை வைக்க வேண்டிய இடம்தானே. முதலில் அவரை அவிழ்த்து விடு, நான் காட்டுகிறேன் என்றாள். உடனே விந்தியவலி விஷ்ணுவைப் பார்த்து, இதோ என் குழந்தையின் தலை, என் தலை, என் கணவன் தலை ஆகிய மூன்று இடங்கள் உள்ளன. தங்கள் மூன்று அடியால் எங்கள் தலைமேல் வைத்து அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றான். மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, “கீழ் உலகத்தில் சுதாலா என்ற இடத்தில் சென்று நீ உன் மனைவி மகனுடன் தங்குவாயாக’ என்றார். அது கேட்ட பலி எங்கேயும் சென்று தங்கி உயிர் வாழும் ஆசை எனக்கில்லை. விஷ்ணுவின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டினான். அது கேட்ட விஷ்ணு, கவலை வேண்டாம். நீ இருக்கின்ற இடத்தில் உன் கூடவே நான் இருப்பேன் என்று கூறியவுடன் பலி மகிழ்ந்து சுதாலாவிற்குள் தங்கினான்.
இந்தக் கதையில் சிவனுக்கு ஒன்றும் இடமே இல்லை என்றாலும் பலியாகப் பிறந்தவன் பூர்வத்தில் கிட்டாவாயாக இருந்து மனத்தினால் சிவபூஜை செய்ததால்தான் இந்திரப் பதவியும், பலியாகப் பிறக்கும் புண்ணியமும் பெற்றான். ஆகவே சிவபூஜைக்கு சமத்துவமானது எதுவுமில்லை என்று ஸ்கந்த புராணம் வலியுறுத்துகிறது.
இதை அடுத்து ஏனைய புராணங்களைப் போல ஸ்கந்த புராணமும் பிரபஞ்ச உற்பத்தி பூமியின் பிரிவினை பற்றிப் பேசுகிறது.
தீர்த்த வரலாறு
இப்புராணத்தின் சிறப்பம்சம் ஏனைய புராணங்களில் இல்லாத முறையில் மிகப் பலவாய தீர்த்தங்கள் பற்றியும், அத்தீர்த்தங்கள் ஒட்டிய கதையினையும் மிக விரிவாகப் பேசுவனவாகும். உதாரணத்திற்குப் பின்வரும் கதையினைக் காணலாம்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட வரலாறு பாரதத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தட்சிண சாகரம் என்னும் தென் கடலை அடுத்துள்ள
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 12 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, நான், கேட்ட, பார்த்து, ஸ்கந்த, ஆகவே, வாமனன், சுக்ராச்சாரி, பலியாகப்

