மந்திரங்கள் - 2. ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
இந்த தேவியானவள் அபயவரத முத்திரைகளுடன் தாமரைப் பூவில் அமர்ந்து, மலர்த்தோரணங்களால் சூழப் பட்டவள். பேரழகுடன் மஞ்சள் பட்டு அணிந்து அழகொளிரும் கிரீடம் சூடியவள். தன் இரு புறத்திலும் தீப சக்திகளைக் கொண்டவள் ஸ்ரீ ஆதிலட்சுமி இத்தகைய தன்மையுடன் விளங்கி எல்லா உயிர்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
தியான சுலோகம்:-
|
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம் வரதாந்விதாம் புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன சம்ஸ்த்திதாம் புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல மண்டிதாம் சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம் ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர் தீபசக்திகாம் செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே. |
பலன்கள்:-
இந்த சுலோகத்தை தினமும் காலை 108 தடவை முறைப்படி பாராயணம் செய்து வந்தால் எந்தக் காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆத்லட்சுமி நமக்கு அருள்புரிவாள். மேலும், எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்- Mantra's - மந்திரங்கள் - Religion - ஆன்மிகம் - ஆதிலட்சுமி

