சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு

சங்கீதம் 53
2 இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
3 ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்@ கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.
4 இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார்.
5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும்.
6 மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது.
7 எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், என்னை, எதிரிகள், ஏனெனில், கடவுள், இறைவா, திருவிவிலியம், ஆன்மிகம், வல்லமையால், உமது

