களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்

2 கற்பு
| 2.1
கற்பினுள் துறவே கடிவரை இன்றே | 34 |
|
2.2 ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க்(கு) உற்றுழி பொருள்பிணி பரத்தைஎன்(று) ஆங்க ஆறே அவ்வயின் பிரிவே | 35 |
|
2.3 அவற்றுள் ஓதலும் காவலும் உயர்ந்தோர்க்(கு) உரிய | 36 |
|
2.4 வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கும் உரித்தே | 37 |
|
2.5 அரசர் அல்லா ஏனை யோர்க்கும் புரைவது என்ப ஓரிடத்(து) ஆன | 38 |
|
2.6 வேந்தர்க்(கு) உற்றுழிப் பொருள்பிணிப் பிரிவென்(று) ஆங்(கு) அவ்இரண்டும் இழிந்தோர்க்(கு) உரிய | 39 |
|
2.7 காதல் பரத்தை எல்லார்க்கும் உரித்தே | 40 |
|
2.8 பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந்(து) உறைவோர்க்(கு) உரிய(து) அன்றே யாண்டுவரை யறுத்தல் | 41 |
|
2.9 பரத்தையின் பிரிவே நிலத்திரி(பு) இன்றே | 42 |
|
2.10 பரத்தையின் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பா(டு) ஈர்அறு நாளும் நீத்(து) அகன்(று) உறைதல் அறத்தா(று) அன்றே | 43 |
|
2.11 கற்பினுள் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்(து) அறப்பொருள் படுப்பினும் வரைநிலை இன்றே | 44 |
|
2.12 புகழும் கொடுமையும் கிழவோன் மேன | 45 |
|
2.13 கொடுமை இல்லை கிழவி மேற்றே | 46 |
|
2.14 கிழவோன் முன்னர்க் கிழத்திதன் புகழ்தல் புலவிக் காலத்துப் புரைவ(து) அன்றே | 47 |
|
2.15 நாடும் ஊரும் இல்லும் சுட்டித் தன்வயின் கிளப்பின் புலவிப் பொருட்டே | 48 |
|
2.16 அவன்வயின் கிளப்பின் வரைவின் பொருட்டே | 49 |
|
2.17 உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றின் புலத்தல் தானே கிழவர்க்கும் வரையார் | 50 |
|
2.18 நிலம்பெயர்ந்(து) உறையும் நிலைஇயல் மருங்கின் களவுறை கிளவி தோன்றுவ(து) ஆயின் திணைநிலைப் பெயர்க்கோள் கிழவர்க்கும் வரையார் | 51 |
|
2.19 நிலம்பொயர்ந்(து) உறையும் எல்லாப் பிரிவும் ஒழிந்தார் அறியவும் அறியா மையும் கழிந்துசேண் படூஉம் இயற்கைய என்ப | 52 |
|
2.20 எல்லா வாயிலும் கிழவோன் பிரிவயின் பல்ஆற் றானும் வன்புறை குறித்தன்று | 53 |
|
2.21 வன்புறை குறித்த வாயில் எல்லாம் அன்புதலைப் பிரிந்த கிளவித் தோன்றின் சிறைப்புறம் குறித்தன்(று) என்மனார் புலவர் | 54 |
|
2.22 சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே அவன்புணர்(வு) அறியும் குறிப்பின் ஆன | 55 |
|
2.23 திணையே வைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு பயனே கோளென்(று) ஆங்(கு)அப் பத்தே அகன்ஐந் திணையும் உரைத்தல் ஆறே | 56 |
|
2.24 அவற்றுள் எச்சமும் கோளும் இன்மையும் உரிய | 57 |
|
2.25 சொல்லே குறிப்பே ஆய்இரண்(டு) எச்சம் | 58 |
|
2.26 முன்படக் கிளந்த பொருள்படைக்(கு) எல்லாம் எச்சம் ஆகி வரும்வழி அறிந்து கிளந்த அல்ல வேறுபல தோன்றினும் கிளந்(து)அவற்(று) இயலான் உணர்ந்தனர் கொளலே | 59 |
|
2.27 களவு கற்(பு)எனக் கண்ணிய ஈண்டையோர் உளம்நிகழ் அன்பின் உயர்ச்சி மேன | 60 |
இறையனார் களவியல் மூலம் முற்றிற்று
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், Iraiyanar Akapporul, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

