நற்றிணை - 78. நெய்தல்

| கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
5 |
| நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா வலவன் கோல் உற அறியா, |
10 |
| உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! |
தோழீ ! வாழி ! தௌ¤ந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !;
வரைவு மலிந்தது. - கீரங்கீரனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வாய், போன்ற, வாழி, நாம், பொன், வந்து, நெய்தல்

