முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 381. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 381. நெய்தல் - தோழி கூற்று

(வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவியதன்பயன் இங்ஙனம் வருந்தியிருத்தல் கொல்?” என்றுதோழி கூறியது.)
| தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய் அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது பசலை யாகி விளிவது கொல்லோ வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி |
5 |
| விலங்குதிரை உடைதருந் துறைவனொ டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே. |
|
| - ....... |
முடிபு: நக்கதன் பயன் விளிவதுகொல்?
கருத்து: தலைவனோடு நட்புச் செய்ததற்கு நாம் அழிதலோ பயன்?
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 379 | 380 | 381 | 382 | 383 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 381. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், பயன், நெய்தல், குறுந்தொகை, தோழி, கூற்று, தலைவனோடு, நாம், சங்க, எட்டுத்தொகை, பசலை, நக்கதன்

