முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 351. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று

(தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக,"அவருக்கு நமர் உடம்படுவார்கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியைநோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.)
| வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் |
5 |
| புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி இன்னகை ஆயத் தாரோடு இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. |
|
| - அம்மூவனார். |
முடிபு: வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்;உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?
கருத்து: தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 349 | 350 | 351 | 352 | 353 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், நமர், குறுந்தொகை, கூற்று, உரிமை, செப்பினர், புன்னை, துறைவர்க்கு, இன்னும், வளையோய், சங்க, உடம்பட்டனர், எட்டுத்தொகை, உவந்திசின்

