முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 35. இளவேனிற் பத்து.
ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து.

இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதி கூறிவிட்டுத் தலைவன் பொருளீட்டச் செல்கிறான். இளவேனில் பருவம் வந்தும் தலைவன் திரும்பவில்லை. எனவே தலைவி தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே குயிற்பெடை இன்குரல் அகவ அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. | 341 |
பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகிறது. ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்ணிய மணல் படிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. | 342 |
வண்டுகள் களிப்புடன் தேன் உண்டு பாடுகின்றன. வலிமை மிக்க கிளைகளில் நுணாப் பூ பூத்திக் கமழ்கிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. | 343 |
திணித்துக்கொண்டு கோங்கம் பூ மொட்டு விரிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இஅள்முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 344 |
மணம் மிக்க குரவம் பூப் பாவைகள் கொய்யும் காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 345 |
அதிரல் பூக்கள் புதிது புதிதாகப் பூத்து ஆற்றின் கன்னங்களாகிய நுண்மணல் படிவில் கொட்டிக் கிடக்ககின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. | 346 |
அழகிய கிளைகளில் பாதிரிப் பூக்கள் பூத்துக் கிடக்கிறது என்று குயில்கள் பாடுகின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 347 |
பொறிப் பொறியாகப் புன்கம் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. நம் முலைகளில் புன்கம் பூக்களை அணிந்துகொள்ளும் பொழுது இது. புன்கம் பூக்கள் குளுமை தரும். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 348 |
மராம் பூக்கள் வலப்புறமாகச் சுழன்று பூத்து மணக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகால் மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. | 349 |
பொறிந்த கொம்புகளை உடையது மாங்கிளை. அதில் தீ எரிவது போல மாவிலைகள் தளிர் விட்டிருக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
|
அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பின் ஒண்பூ உறப்பத் தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. | 350 |
வேப்பம் பூ பூத்ததுக் கிடக்கிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதான். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தன்றே, தான்வந், வாரார், அவரோ, பொழுதே, மராஅம், வேய்ந்துநம், வலஞ்சுரி, தண்பொழில், மலரும், பொரிப்பூம், எழில்தகை, பொலியப், புன்கின், முறிதிமிர்

