வேல் விருத்தம் - வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
|
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல அங்கியும் உடன் சுழலவே அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல அகில தலமும் சுழலவே மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர மாணப் பிறங்கி அணியும் மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம வகை வகையினிற் சுழலும் வேல் தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய சந்தம் உடனும் பிறைகள்போல் தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு தன்புறம் வரும் சமனை யான் கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண கஞ்ஜம் உதவும் கருணைவேள் கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே (கந்தன் அடல் கொண்ட வேலே முருகன் அடல் கொண்ட வேலே) |
வேல் வருகின்ற வேகத்தினால் நடந்தவைகள். தேவலோகம் சுழற்சி அடையவும், எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும், எல்லாவற்றையும் நீறாக்கக் கூடிய அக்னி தேவனும் சுற்றவும், அலை வீசும் சமுத்திரம் கொதிப்படைந்து கொந்தளிக்கவும், அசுரர்களின் உயிர்கள் தமக்கு முடிவு காலம் வந்து விட்டதே என எண்ணி பதட்டத்தினால் சுற்றவும், எல்லா பிரபஞ்சமும் சுழலவும், வட்ட வடிவமாயுள்ள ஆயிரம் கோடி சூரியர்கள் போலவும், ஆயிரம் கோடி சந்திரர்கள் போலவும் (விளங்கிக் கொண்டு), அசுரர்களின் குருதி ஏராளமாக பெருக, தான் பூஷணமாக அணிந்திருக்கும் மணிகளின் சப்தத்தால் எல்லா உலகங்களும் மருட்சி அடையவும், ஆயுதப் பயிற்சியை படையில் பலவித நடைகளுடன் சுழன்று வருகின்ற வேலர்யுதம் (அது யாருடையது என வினவினால்) தண்டாயுதத்துடனும், கொடுமையான பாசக் கயிற்றுடனும், கருத்த நிறத்துடனும், சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், தீக் கொப்புளிக்கின்ற கொடிய கண்களுடனும், எருமைக் கடாவில் ஏறி வரும், எமனை, நான் பார்த்து அச்சப்பட்டு நடுங்கும் போது, பயப்படாதே என்று, தன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி, கந்தப் பெருமான், முருகப் பெருமான், குகப் பெருமான் வளப்பமான வாழ்க்கையை உடைய வேடர்களின், புத்திரியான வள்ளிப் பிராட்டியின், மணாளன், மிகவும் வளமையான வேலாயுதமே அது
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Vel Virutham, வேல் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சுழல, வேல், வேலே, பெருமான், அடல், சுற்றவும், கொண்ட, எல்லா, அசுரர்களின், ஆயிரம், கோடி, சுழலவே, போலவும், உடனுங்க், அடையவும், வரும், முருகன், உடனும், கொடிய, வருகின்ற, கந்தன்

