திருவகுப்பு - 21. வீரவாள் வகுப்பு
(வீரவாகு தேவரின் வாட்படையின் சத்தியைக் கூறிற்று)
|
பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே |
பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே |
பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே |
போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ் பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே |
பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே |
பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே |
பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி பாறுபேய் துய்த்திடநி ணங்க்ளுட் டிடுமே |
பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே |
ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே |
யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே |
ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல் ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே |
ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே |
மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான் |
வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான் |
வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன் |
மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruvaguppu, திருவகுப்பு, Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - திடுமே, கிடுமே, ஆணையா, டிடுமே, போரிலே, னுக்குமுயர்

