திருப்புகழ் - பாடல் 965 - மதுரை
ராகம் - .ண்முகப்ரியா
தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமி-2, தகதகிட-2 1/2
| தானத் தனதான தானத் ...... தனதான |
|
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே. |
நீதித்தன்மை கொண்டதாய், சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் நல்லறிவைத் தந்தருள்வாயாக. ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞான சமுத்திரமே, குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 963 | 964 | 965 | 966 | 967 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே, தனதான, தானத்

