திருப்புகழ் - பாடல் 847 - திருவீழிமிழலை
ராகம் - அமிர்த வர்.ணி
தாளம் - ஆதி
|
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான |
|
எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா ...... யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதா ...... ளருள்வோனே முநிவோ ரமரோர் முறையோ வெனவே முதுசூ ருரமேல் ...... விடும்வேலா திருமால் பிரமா வறியா தவர்சீர் சிறுவா திருமால் ...... மருகோனே செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. |
உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்ஆற. முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீழிமிழலையில்* வாழும் பெருமாளே.
* திருவீழிமிழலை தஞ்சை மாவட்டம் குற்றாலம் ஊருக்கு 6 மைல் தெற்கே உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 845 | 846 | 847 | 848 | 849 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனனா, இவர், அவர், என்று, முறையோ, தாயார், என்றும், முருகனே, சொல்லும்படியாகி, திருமால், கருவாய், எருவாய், யிதுவே, முருகா, திருவீழிமிழலை, பெருமாளே

