திருப்புகழ் - பாடல் 739 - திருவர்முர்
ராகம் - ....;
தாளம் -
| தான தனன தனத்தந் ...... தனதான |
|
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான் மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர் வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே. |
குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும், கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும், அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும், ஊழிக்காலம் போல நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்? மாதரசி திலகவதியாரின்* புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில் வாழுகின்ற குமரேசனே, மயில் மீது வீற்றிருக்கும் குமரேசனே, அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே, யமனுடைய முதுகைப் பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே.
* திலகவதியார் அப்பரின் தமக்கை. திருவாமூரில் வாழ்ந்து, அப்பரை சமணத்திலிருந்து சைவத்துக்கு மீட்டார். திருவாமூர் பண்ருட்டியிலிருந்து 5 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், அலைகடல், இரவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 737 | 738 | 739 | 740 | 741 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - திருவாமூரில், குமரேசனே, மன்மதன், நிலவு, திருவாமூர், பெருமாளே, புகழை

