திருப்புகழ் - பாடல் 646 - கதிர்காமம்
ராகம் - குந்தல
வராலி; தாளம் - அங்கதாளம் - 7
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
| தானதன தானத் ...... தனதான |
|
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் தீதகல வோதிப் ...... பணியாரும் தீநரக மீதிற் ...... றிகழ்வாரே நாதவொளி யேநற் ...... குணசீலா நாரியிரு வோரைப் ...... புணர்வேலா சோதிசிவ ஞானக் ...... குமரேசா தோமில் கதிர்காமப் ...... பெருமாளே. |
பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, நல்ல அருட்குண சீலனே, வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 644 | 645 | 646 | 647 | 648 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே

