திருப்புகழ் - பாடல் 557 - திருசிராப்பள்ளி
ராகம் -
மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் - 3
|
தனதனதனத் ...... தனதான தனதனதனத் ...... தனதான |
|
பகலிரவினிற் ...... றடுமாறா பதிகுருவெனத் ...... தெளிபோத ரகசியமுரைத் ...... தநுபூதி ரதநிலைதனைத் ...... தருவாயே இகபரமதற் ...... கிறையோனே இயலிசையின்முத் ...... தமிழோனே சகசிரகிப் ...... பதிவேளே சரவணபவப் ...... பெருமாளே. |
நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே.
* சிரகிரியை சென்னிமலை என்றும் கூறுவர்.சென்னிமலை ஈரோட்டிற்கு அப்பால் ஈங்கூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தலம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 555 | 556 | 557 | 558 | 559 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சென்னிமலை, என்ற, சரவணபவப், தனதான, தனதனதனத்

