திருப்புகழ் - பாடல் 329 - காஞ்சீபுரம்
ராகம் - பாகேஸ்ரீ;
தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
|
தத்தத் தனதான தத்தத் ...... தனதான தத்தத் தனதான தத்தத் ...... தனதான |
|
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே. |
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை யான் பெறுதற்கு இயலுமோ? வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தத்தத், தனதான, பெருமாளே

