திருப்புகழ் - பாடல் 1301 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
| தன்ன தனந்தன ...... தனதான |
|
பொன்னை விரும்பிய ......பொதுமாதர் புன்மை விரும்பியெ ...... தடுமாறும் என்னை விரும்பிநி ...... யொருகால்நின் எண்ணி விரும்பவு ...... மருள்வாயே மின்னை விரும்பிய ...... சடையாளர் மெய்யின் விரும்பிய ...... குருநாதா அன்னை விரும்பிய ...... குறமானை அண்மி விரும்பிய ...... பெருமாளே. |
தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின் இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்) என்னை விரும்பி நீ ஒரு முறையேனும் உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக. மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான் உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே, உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1299 | 1300 | 1301 | 1302 | 1303 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விரும்பிய, விரும்பி, என்னை, பெருமாளே

