திருப்புகழ் - பாடல் 1295 - பொதுப்பாடல்கள்
ராகம் -
கந்தலவராளி
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3
| தத்தனத் தனனதத்த ...... தனதான |
|
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக நத்தியு தமதவத்தி ...... னெறியாலே லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே. |
தினமும் உன்னை மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும், தியானநிலை பெற்று வாழும் பெரியோரைத் துணையென்று அவர்களை நாடியும், சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக இலக்கியத்தில் (பரத சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது நிருத்த தரிசனத்தை* நீ எனக்கு அருள்வாயாக. வெற்றியும் பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த சக்ராயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே, குற்றம் இல்லாத பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே, சேவற்கொடியை ஏந்திய பெருமாளே.
* சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களில் நிருத்த தரிசனத்தில் முருகன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டிப் பாடியுள்ளார்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1293 | 1294 | 1295 | 1296 | 1297 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தகிட, நிருத்த, பெருமாளே, மனத்தில்

