திருப்புகழ் - பாடல் 1286 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
| தானான தானதனத் ...... தனதான |
|
கோடான மேருமலைத் ...... தனமானார் கோமாள மானவலைக் ...... குழலாதே நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே மாடேறு மீசர்தமக் ...... கினியோனே மாதானை யாறுமுகப் ...... பெருமாளே. |
சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1284 | 1285 | 1286 | 1287 | 1288 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்ட, பெருமாளே

