திருப்புகழ் - பாடல் 1281 - பொதுப்பாடல்கள்
ராகம் -
அஸாவேரி
தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
| தத்ததன தானத் ...... தனதான |
|
இத்தரணி மீதிற் ...... பிறவாதே எத்தரொடு கூடிக் ...... கலவாதே முத்தமிழை யோதித் ...... தளராதே முத்தியடி யேனுக் ...... கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா சத்தசொரு பாபுத் ...... தமுதோனே நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே. |
இந்தப் பூமியில் பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும், முக்திநிலையை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே, ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே, புதிய அமிர்தம் போன்றவனே, தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே, என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே, ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1279 | 1280 | 1281 | 1282 | 1283 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருமாளே, கூடிக்

