திருப்புகழ் - பாடல் 1262 - பொதுப்பாடல்கள்
ராகம் -
...; தாளம் -
|
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான |
|
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப டீர தனம்புள ...... கிதமாகப் பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி தாப முடன்பரி ...... மளவாயின் ஆர முதுண்டணை மீதி லிருந்தநு ராகம் விளைந்திட ...... விளையாடி ஆக நகம்பட ஆர முயங்கிய ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ நார தனன்றுச காய மொழிந்திட நாய கிபைம்புன ...... மதுதேடி நாண மழிந்துரு மாறி யவஞ்சக நாடி யெபங்கய ...... பதநோவ மார சரம்பட மோக முடன்குற வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய் மாமு நிவன்புணர் மானு தவுந்தனி மானை மணஞ்செய்த ...... பெருமாளே. |
பாரமானதும், நறு மணம் வீசுவதுமான கூந்தல் குலைய, சந்தனம் அணிந்துள்ள மார்பகம் கட்டுத் தளர்ந்து புளகிதம் கொள்ள, மாதர்களின் உதரத்தில் முழுகியவனாய், மிக்க தாகத்துடன் நறு மணம் உள்ள வாயிதழில் நிறைந்த அமுதூறலைப் பருகி, படுக்கையில் இருந்து, காமப் பற்று உண்டாக லீலைகளைச் செய்து, உடலில் நகக்குறிகள் பட மிக நன்றாகத் தழுவிய வேசையர் ஆசையை மறந்து, உன்னை உணரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? நாரத முனிவர் அந்நாளில் (வள்ளி சம்பந்தமான) உதவி மொழிகளை எடுத்துச் சொல்ல, வள்ளி நாயகி இருந்த பசுமையான தினைப் புனத்தைத் தேடிச் சென்று, கூச்சத்தையும் விட்டு (வேடன், விருத்தன், வேலன்) ஆகிய உருவம் எடுத்த தந்திரக்காரனே, விரும்பி, தாமரைத் திருவடிகள் நோக, மன்மதனின் மலர்ப்பாணங்கள் தைக்க, காம இச்சையுடன் குறவர்கள் வாழும் வள்ளிமலையின் மீது சென்று, சிறந்த சிவமுனிவர் இணைந்ததால் லக்ஷ்மியாகிய மான் பெற்ற ஒப்பற்ற மான் போன்ற வள்ளியைத் திருமணம் செய்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1260 | 1261 | 1262 | 1263 | 1264 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனந்தன, சென்று, மான், வள்ளி, மணம், பெருமாளே, ராகம்

