திருப்புகழ் - பாடல் 1026 - பொதுப்பாடல்கள்
ராகம் -
..... ; தாளம் -
|
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
|
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு தோகையர்ம யக்கி ...... லுழலாதே பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே பாவவினை யற்று னாமநினை புத்தி பாரிலருள் கைக்கு ...... வரவேணும் ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி ஆண்மையுட னிற்கு ...... முருகோனே ஆதியர னுக்கு வேதமொழி முற்றி யார்வம்விளை வித்த ...... அறிவோனே வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு வேளையென நிற்கும் ...... விறல்வீரா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
காதில் அணியும் தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய, அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே, என் பாவ வினைகள் தொலைந்து போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும். ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே, ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே, காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே, முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி, அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1024 | 1025 | 1026 | 1027 | 1028 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தானதன, தத்த, பெருமாளே, வலிமையையும், கொண்டு, வெட்டி, வித்த, வரவேணும், பாடல், நிற்கும்

