சேவல் விருத்தம் - சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
|
வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன் வலிய தூதுவர் பில்லி பேய் வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட வாயினும் காலினாலும் பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம் பவளமா அதிகாசாமா பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை பார்த் அன்புறக் கூவுமாம் முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ முன்பேறு முத்தி முருகன் முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை முனிந்தே தொடுத்த சிறுவன் சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு சித்தர்க் கிரங்க் அறுமுகன் ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி சேவற் திருத் துவஜமே (சேவற் திருத் துவஜமே) |
எதிரே வந்து, பெரும் ஆரவாரத்துடன், அந்த மதத்துடன் நெருங்கித் தொடரும் வகையில், தண்டாயுதம் ஏந்தியுள்ள யமனின் பலமிக்க தூதுவர்கள், பிறரால் ஏவப்படும் பிசாசுகள் (இவைகளை), வலிய சினத்துடன் அவைகளை புத்தி மயங்கும்படி செய்தும் மிகப் பெரிய பூதங்களும் பயந்து நடுங்கும்படி, தன்னுடைய மூக்கினாலும் காலினாலும், கால் பந்து போல் அவைகளை உதைத்து மிதித்து, அடித்து, வடவாமுகாக்கினியை பவளமணி போல் கொத்தி எடுத்து பெரிய நகை புரிந்து, பசிய சிறைகளின்மேல் முதுகில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளை, நோக்கி அன்புடன் குரல் கொடுக்கும் (அது எது என வினாவினால்) முற்பட்டு விளங்கும், கல்வியின் அளவை நிர்ணயிக்கும் சங்கப் பலகையின் மேல், கல்வியில் வல்லவர்களான 49 புலவர்களும் வணங்க, முன்பு ஒரு சமயம் ஏறி வீற்றிருந்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டியான முருகன், பழமையான காடுகளில் வசிக்கும் வேடர்கள், முன்பு பின் வாங்கி, கூரிய வேலாயுதத்தை சினத்துடன் செலுத்திய முருகன், மன வியாகுலத்தை நீக்கும் கந்தக் கடவுள், என்று துதிக்கும், உள்ளத்தை உடைய பக்தர்க்கு இரங்கி கருணை புரியும் சண்முகப் பெருமான் வெற்றியையே காணும் முருகன், பரிசுத்த மூர்த்தி, தாமரை மலரில் வசிக்கும் பிரம்மனை சிரசில் குட்டி தண்டித்த முருகப் பெருமானின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Seval Virutham, சேவல் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - முருகன், போல், பெரிய, விளங்கும், அவைகளை, முன்பு, வசிக்கும், துவஜமே, காலினாலும், வலிய, சேவற், திருத், வந்து, சினத்துடன்

