சேவல் விருத்தம் - சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்ட சாபு
|
கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற் களை இறுக்கியு முறைத்து கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக் காலத்தில் வேலு மயிலும் குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர குரலொலித் அடியரிடை குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம் அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற் பனமுறைத் தத மிகவுமே அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து அவனிமெய்த் திட அருளதார் சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி சிவிகை பெற்றினிய தமிழை சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற் சேவற்திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே குருபரன் சேவற்திருத் துவஜமே) |
கரிய நிறத்துடனும், முரட்டு குணத்துடனும், பாச வலையான், கயிற்றை ஏந்திக் கொண்டு, கோரைப் பற்களை, நற நற என கடித்துக் கொண்டு, கலக்கத்தைத் தரும், எம ராஜன், என் முன்னால் தொடர்ந்து வந்து, கையால் பிடித்து கொண்டு போகும், அந்த அந்திம காலத்தில், ஞானத்தைத் தரும் சக்தியாகிய வேலாயுதமும் ஓங்கார ரூபமான மயில் வாகனமும், குரு சிரேஷ்டனாகிய குகப் பெருமானும், அந்த அபாயகரமான நேரத்தில் என் முன் கருணையுடன் தோன்றும் படி, கூவி அழைத்து, அடியவர்களின் மரண துன்பத்தை, அடியோடு நீக்கி, உலகேழும் அதிர அரற்றும் மூக்கினால், கோபம் மிக்க பேய்களை, கொத்தி குதறி, சுற்றிச் சுற்றி வட்டமிட்டு முட்ட வரும் (அது எது என வினாவினால்) அருமை மிக்க கொற்கைப் பாண்டியன், தேகத்தைக் கருக்கி விட்ட, மிகவும் வெப்ப நோயை (சுரத்தை), மூல காரணத்தை எடுத்துச் சொல்லி, கொலைச் செயல்களை செய்து வந்த சமணர்களை, வாது புரிந்து கழுவில் ஏற்றி, ஒரு சிலரை உண்மைப் பொருளாகிய சிவத்தைச் சுட்டிக் காட்டும் விபூதியை அணியச் செய்து, உலகம் முழுவதும் உண்மைப் பரம் பொருளை அறியும்படி செய்து, அருள் புரிந்தவரும், சீர்காழி தலத்தில் திரு அவதாரம் செய்து, அமிர்தம் போன்ற குளுமையையும் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் உடைய, முத்துப் பந்தலை சத்தி முத்தம் என்ற தலத்தில் பெற்று, இனிமையான தமிழில் தேவாரப் பாக்களை, சிவ பெருமான் விருப்பத்துடன் கேட்கும்படிப் பாடி அருளிய ஞான சம்பந்த மூர்த்தியான ஆறுமுகப் பெருமான், வெற்றியைத் தரும் கொடியிலுள்ள சேவலே தான் அது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Seval Virutham, சேவல் விருத்தம், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - செய்து, துவஜமே, கொண்டு, சேவற்திருத், தரும், உண்மைப், தலத்தில், போன்ற, பெருமான், கொத்தி, மிக்க, முட்ட, காலத்தில், அந்த, கழுவில்

