முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 70. கரூர் திருச்சிப் புலவர்கள்
அறிவுக் கதைகள் 100 - 70. கரூர் திருச்சிப் புலவர்கள்

இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.
மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்.-என்று நிமிர்ந்து பேசினார்.
இதற்கு மூன்று பொருள்
கால்வழி நீர்:
1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்.
2. தாம் குடித்த எச்சில் நீர்
3. கால்வழியே விரும் சிறுநீர்.
சொன்னவரோ பெரியவர் கேட்டவரோ சிறியவர் வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.
"தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்' என்று பேசத் துணிந்தார்.
'மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால்-ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?-என்றார். (நான் தேடிப் போகவில்லை).
ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா-அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே-தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)
எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
70. கரூர் திருச்சிப் புலவர்கள் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - காலில், நீர், புலவர், மாமன்

