வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 64
பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சுமையை அப்புறப்படுத்தத்தான் கொஞ்சம் தாமதமும் சிரமமும் ஏற்பட்டது. சுமையை இறக்கிய உடனே கழுதைகள் தரையில் இரண்டொரு முறை புரண்டதும் புல்லை நோக்கிப் போயின. அந்த வெளியிடத்தின் ஒரு பாகத்தில் சில காய்ந்த கட்டைகளும் சாம்பலும் கிடப்பதைப் பார்த்த புருகூதன் அந்தச் சாம்பலைத் தள்ளினான். கீழே நெருப்பு இருந்தது. அதைப் பார்த்த இருவரும் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர். உடனே, ரோசனா பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அருவியை நோக்கி நடந்தாள். புருகூதன், சில சிறிய குச்சிகளையும் காய்ந்த சருகுகளையும் அந்த நெருப்பின் மீது போட்டு, பெரு நெருப்பை உண்டாக்கிவிட்டான். இதற்குள் யுவதியும் தண்ணீர் கொண்டு வந்துவிட்டாள். புருகூதன் ஒரு சிறிய தாமிரப் பாத்திரத்தை முன்னே வைத்துக்கொண்டு பசுவினுடைய தொடைப் பாகத்தின் மாமிசத்தைக் கத்தியால் அறுத்துக் கொண்டே, யுவதியுடன் வார்த்தையாடத் தொடங்கினான்.
“ரோசனா! நாளைப் பிற்பகலுக்குள் நாம் மலை உச்சியை அடைந்து விடுவோம். அதிலிருந்து உங்களுடைய பசுத் தொழுவம் ரொம்ப தூரம் இராதே?”
“அந்த இடத்திலிருந்து கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது.”
“என்னுடையது அதே திசையில் எட்டு மைல் தூரத்திலிருக்கிறது, ரோசனா. உங்களுடைய பசுக் கொட்டிலின் வழியாகத்தான் நான் போக வேண்டியிருக்கிறது.”
“அப்படியானால் என்னுடைய முப்பாட்டனாரை நீ பார்க்க முடியும். உனக்கும் அவருக்கும் சந்திப்பு ஏற்பட வேண்டுமே என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.”
“ரோசனா! இன்னும் வழியிலே நாம் தாமதிக்க வேண்டியது ஒரே ஒருநாள் தான். இப்பொழுது இந்த மாமிசம் நமக்குப் போதுமல்லவா?”
“போதும்; ஏராளம். என்னிடத்திலும், கன்றினுடைய தொடை மாமிசம்
இருக்கிறது. அதிக நேரம் வைத்திருந்தாலும் மாமிசம் கெட்டுப் போகும்.”
“பரவாயில்லை. இதில் உப்புப் போட்டுச் சமைத்தால் ருசியாயிருக்குமா?”
“மிக மிக நன்றாக இருக்கும் புருகூத! நான் கன்றின் கால்களும் வைத்திருக்கிறேன். மாமிசம், கால் இவற்றோடு கொஞ்சம் மாவையும் சேர்த்து அருமையான சூப் செய்யலாம். இப்போது ஆரம்பித்தால் நாம் நித்திரைக்குப் போவதற்குள் சூப்புத் தயாராகி விடும்.”
“நான் தனிமையாய் இருந்தால் சூப்புப் போடுவது கிடையாது. அதற்கு ரொம்ப நேரம் ஆகிறது. ஆனால் இன்று நாம் இந்த ஆடுகளையும், கழுதைகளையும் பிடித்துக் கட்டிவிட்டுக் கொஞ்சம் பேசிக்கொண்டிருப்போம். அதற்குள் சூப்பும் தயாராகி விடும்.”
“என்னுடைய முப்பாட்டனாருக்கு நான் வைக்கும் சூப்பு ரொம்பப்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், மாமிசம், நாம், புருகூதன், கொஞ்சம், கொண்டு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

