முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 320
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 320
கொண்டிருக்கின்றன. துணியை மட்டும் எடுத்துக்கொள்வோம்; 1814ம் வருடம் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு 18 66 608 தான்கள் துணி வந்தன; 1835-ம் வருடத்தில் 3 76, 085 தான்கள் வந்தன. ஆனால் 1814-க்கும் 1835-க்கும் இடையில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குப் போகும் துணி 8, 18, 20, 85, 17, 77, 277 கஜங்களாக அதிகரித்துவிட்டது. டாக்கா மஸ்லின்களைத் தயாரிக்கும் இந்தியர்கள் தங்கள் பஞ்சுகளைச் சீமைக்கு அனுப்பித் துணி நெய்விக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் எவ்வளவு தெரியுமா? சமீப காலத்துக் கணக்கையே எடுத்துக்கொள்வோம்: 1845-ல்10, 75,309 பவுண்டுகள் பஞ்சு இந்தியாவிலிருந்து இங்கு வந்திருக்கிறது.”
“எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம்!”
“ஆனால் என் குருநாதர், ‘அந்நிய நாட்டாரின் இந்தக் கொடுமைக்காக என்மனம் கதறுகிறது. ஆனால், இந்தப் பழம் பசலிப்போக்கின் அழிவைக் கண்டு என் அறிவு சந்தோஷப்படுகிறது’ என்று சொல்கிறார்.”
“அப்படியானால், இரண்டிற்கும் இரண்டு பாதைகள் உண்டா?”
“ஆம்; இரண்டிற்கும் இரண்டுபாதைகள் தான் உண்டு, ஆனி! ஒரு தாய் பிரசவிக்கும்போது எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள்! அதே சமயத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறாளல்லவா?
அழிவின்றிச் சிருஷ்டி நடக்காது. இந்தச் சிறிய சிறிய குடியரசுகளை உடைத்தெறியாமல் ஒரு பெரிய சக்தி வாய்ந்த குடியரசிற்கு அஸ்திவாரம் போட முடியாது. இந்தியர்களின் பக்தி, தங்கள் கிராமக் குடியரசோடு எல்லையிட்டிருக்கும்வரை, தேசபக்தியை--அகில இந்தியாவிற்காகவும் போராட வேண்டுமென்ற மனப்பான்மையைத் தோற்றுவிக்க முடியாது. இப்பொழுது ஆங்கிலேயர்கள் கப்பல், ரயில், தந்தி முதலிய இயந்திரங்களைத் தங்கள் வியாபார சௌகரியத்திற்காகவே இந்தியாவில் பரப்புகிறார்கள். ஆனால், ரயில் வண்டிகளைச் செய்வதற்கும், அவற்றை மராமத்துச் செய்வதற்காகவும், இந்தியாவின் இரும்பையும், நிலக்கரியையும் ஆங்கிலேய முதலாளிகள் உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்பொழுது, அங்ககேயே பொருள்கள் தயாரிக்கப்படுவதையும் எத்தனை நாளைக்குத் தடுத்து வைக்கமுடியும்? தங்கள் கண் முன்னால் விஞ்ஞானத்தின் வெற்றிகளைப் பார்த்த பிறகும், இந்திய மூளை எவ்வளவு நாளைக்குத் தூங்கிக் கொண்டிருக்கும் என்று மார்க்ஸ் கேட்பது சரியான நியாயந்தான்.”
“அதாவது இந்தியாவிலே தொழிற் பெருக்கத்தையும் முதலாளித்துவத்தையும் பரப்புவது சுலபம் என்று கருதுகிறாயா?”
“ஆம்; இங்கிலாந்திலே பிரபுத்துவ-ஜமீன்தார்களின் செல்வாக்கு அதிகமில்லையா?”
“ஆம்.”
“1832-ம் வருடத்துச் சீர்திருத்தச் சட்டம், இங்கிலாந்தின் ஆட்சிக்
கடிவாளத்தை முதலாளிகள் கையில் கொடுத்துவிட்டதா?”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 318 | 319 | 320 | 321 | 322 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்கள், “ஆம், என்று, எவ்வளவு, துணி, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

