முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 304
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 304
போன்ற அகலப் பட்டன்கள் தொங்கும் கறுப்புக் கோட்டும், திமிர் நிறைந்த வெள்ளை முகமும் நெருங்கிப் பழக முடியாத பயங்கரப் பொருளாகவேதான் தோன்றியது. ஆனால், முதலில் கோல்மேன்தான் பேசத் துவங்கினான். சிறிது சிறிதாகத் தின்கௌடியின் தைரியமும் வளர்ந்தது. சம்பாஷணையிலிருந்து கம்பெனியின் எஜமானர்கள் மீது கோல்மேனுக்கு வெறுப்பு அதிகமென்று தெரியவந்தது. கவர்னரிலிருந்து கம்பெனியின் சாதாரண ஏஜெண்டு வரை எல்லோரையும் தாக்கிப் பேச அவன் தயங்கவில்லை. தின் கௌடியும் கம்பெனியின் அதிகாரிகள் மீது வெறுப்படைந்திருந்தான். இருபது வருட காலமாக, அவன் கம்பெனியின் பெரிய பெரிய ஆபீசுகளிலே குமாஸ்தா வேலை
பார்த்திருக்கிறான். அவன் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஆயினும், அளவுக்குட்பட்ட ஆசையும் சுயமரியாதை உணர்ச்சியும் உடையவன், தின்கௌடி, தனது வாழ்க்கைக்குப் போதுமான அளவு சம்பாதித்துக் கொண்டு விட்டான். ஒரு பழைய ஏஜெண்டின் தயவினால், கொள்ளைச் சமயத்தில் இருபத்தினாலு பர்கானா ஜில்லாவைச் சேர்ந்த நாலு கிராமங்களுக்கு ஜமீன்தாராகிவிட்டான். அவைகளின் வருமானத்தோடு ஒப்பிட்டால், அவன் செலுத்த வேண்டிய வாரம் மிகக் குறைவானது. இது சாகிப்பின் தயவினால் கிடைத்தது. ஆனால் அந்தத் தயவைப் பெறுவதற்காக அவன் செய்துள்ள பாவச்செயல் ஏழேழு ஜென்மங்களுக்கும் அவனை விட்டுப் போகாதென்பது அவனுக்குத் தெரியும். அவன் அந்த எஜமானனைக் குஷிப்படுத்துவதற்காக கிராமத்தின் ஓர் அழகிய பிராமண யுவதியை அவனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பித்தான். அந்தத் துரைமார்கள் அந்தக் காலத்தில் தங்கள் மனைவியரை, உடன் அழைத்து வருவதில்லை. ஏனெனில், அபாயங்கள் நிறைந்த ஆறுமாதக் கடற் பிரயாணம் அத்தனை சுலபமானதல்ல. தின்கௌடிக்கு வயது நாற்பத்தி ஐந்து. அவனுடைய புஷ்டியான கறுத்த சரீரம் நல்ல ஆரோக்கியமாய் இருந்தது. ஆயினும் அவன்நாள் தோறும் காலையில் எழுந்ததும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, கைவிரல்களைச் சரி பார்த்துக் கொள்வான். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், தன் உடம்பிலே குஷ்டம் தோன்றும் என்பது அவன் நம்பிக்கை. ஏனெனில், ஒரு பிராமணப் பெண்ணின் கற்பைக் கெடுத்ததற்குரிய தண்டனை அதுதான் என்பது அவன் கருத்து. துரைகளின் வசவுகளையும், உறுமல்களையும், அடிகளையும் சகித்துச் சகித்து அவன் அயர்ந்து
போய்விட்டான். ஆகவே வேலை பார்க்கக் கூடிய சக்தி இருந்தும் கூட, அவன் வேலையை ராஜினாமா செய்து விட்டுத் தன் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இருபது வருட காலம் மௌனமாகச் சகித்துக் கொண்ட அவமான நெருப்பு, அவன் மனத்திலே புகைவிடத் தொடங்கிற்று. கோல்மேனும் தன்னைப் போலவே கம்பெனி அதிகாரிகளை வெறுக்கிறான் என்பதைத் தெரிந்ததும் இருவரும் மனம் திறந்து பேசத் தொடங்கினார்கள்.
“ஈஸ்ட் இந்தியா கம்பெனி வியாபாரத்திற்காகவே தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அது ஜனங்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கு வருகிற துரைமார்கள் எல்லோரும், விரைவிலே லட்சாதிபதிகளாகத் தங்கள் தேசத்திற்குத் திரும்ப வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பெரிய
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 302 | 303 | 304 | 305 | 306 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவன், கம்பெனியின், பெரிய, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

