முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 238
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 238
மாமிசம் இல்லாத விருந்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இப்பொழுதோ பசு மாமிசம் சாப்பிடுவது தர்மவிரோதம் என்று கருதப்படுகிறது. நம் மகரிக்ஷிகள், விதவைகளின் மறுமணம் முற்றிலும் நியாயமானது என்று கருதினார்கள். அவர்கள் வாக்குப்படி இளம் பிராமண அல்லது க்ஷத்திரிய விதவை, ஆறுமாதம் அல்லது ஒரு வருட காலத்திற்கு மேல் மறு கணவனைத் தேடிக் கொள்ளாமல்
இருக்க முடியாதென்பது எங்கே? - இப்பொழுது, விதவா விவாகமே தர்ம விரோதமானது என்று சொல்வது எங்கே? இந்த எல்லாச் சூழ்ச்சிகளுக்கும் - புதிய ஹிந்து தர்மத்திற்கும் ஆணி வேரான குப்த அரச வம்சத்திலேயே, ராம குப்தனின் விதவையல்ல, மனைவியை சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் தன் பட்ட மகிஷியாக்கிக் கொண்டான். இளம் பெண்களை விதவைகளாகவே வைத்திருப்பதைத் தடுக்க பிர்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுள்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க பிற பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள், எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்? இளம் பெண்களை விதவையாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச் சிதைவு. ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் சேர்ந்து, தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புது வழி கண்டுபிடித்தார்கள். அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நராத் மாக்கள்! கொளுத்துவது. இவ்விதம் பெண்களை உயிரோடு கொளுத்துவதை, அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைப் பார்த்தும் மனமிளகாத தெய்வங்கள் அவற்றின் உருவத்தைப் போல் உண்மையிலேயே கற்கள் தானா அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தாங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிறார்கள் என்று இந்தப்
பிராமணர்கள் சொல்கிறார்கள். அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நராத்மாக்கள்! ஏன் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே, ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களை ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நர பிசாசிடம் அன்பு வைத்திருக்கிறார்களா? அவனிடத்தில் காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்கமுடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாய்ப் போக! தற்கொலை, தர்மமா? பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே, அதைக் கேட்டு வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே; கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொல்லுகிறீர்களே, இதெல்லாம் தர்மமா? உங்களுடைய இந்தக் கொலை முயற்சிகளுக்கு விரோதமாக நான் வாய் திறக்க முடியவில்லை. ஏன்? நான் அரசனின் ஆதரவிலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அரசனுடைய ஆதரவை நான் வேண்டுமென்றே தேடிக் கொள்ளவில்லை. என்னுடைய சொத்து எனக்கு ஏராளமாக இருந்தது. அதைக் கொண்டு
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 236 | 237 | 238 | 239 | 240 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, கொண்டு, வருடந்தோறும், ஆயிரக்கணக்கான, நான், தங்கள், இளம், அல்லது, பெண்களை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

