முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 220
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 220
பின்பற்றி நடந்து வந்திருக்கிறார்களென்று நான் கருதுகிறேன்.”
“ஆம், அவர்கள் பிராமணர்களைவிடத் தங்களை உயர்ந்தவர்களாகவே கருதினார்கள்.”
“தாத்தா! நீ இங்கே வந்தபிறகு, உனது குழந்தைகளுக்கு அந்த பிராமணர் வீடுகளிலே கல்யாணம் செய்யாமல் நாகர் வீடுகளிலே கலியாணம் செய்த காரணம் என்ன?”
“இரண்டு காரணங்களிருந்தன, குழந்தாய்! ஒன்று அவர்கள் நம்முடைய குலத்தைப் பற்றிச் சந்தேகம் கொண்டார்கள். என்றாலும் அதனால் ஒன்றும் ஆகிவிட மாட்டாது. நான் விரும்பியிருந்தால், இந்தப் பிராமணர்களின் பெண்களையே கலியாணம் செய்திருக்கலாம். இரண்டாவது காரணம், அதுதான் முக்கியமான காரணமும்கூட. இந்த பிராமணர்களை விட நாகர்கள் நம்மைப் போல அதிக வெளுப்பாயும் உயரமாயும் இருந்தார்கள். மேலும் இந்தப் பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளாதபோதும் கூடத் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.”
“நாகர்கள் யார் தாத்தா?”
“பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதால் மட்டும் ஒருவர் பிராமணராகிவிட முடியாது. எந்தத் ேதசத்தைச் சேர்ந்த பிராமணன், எந்தக் கோத்திரம் என்றெல்லாம் கேட்பார்கள். நம்முடைய சம்பந்திகளான இந்த நாகர்கள் நகரத்திலே வசிப்பவர்கள். ஆகையால், தங்களை நாகர் கோத்திர பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்கள். நாம் நம்மை யௌதேயர்கள் என்று சொல்லிக் கொள்வதைப் போல.”
“ஆனால் அவர்கள் உண்மையில் யார், தாத்தா?”
“சமுத்திரக் கரைகளிலே வசிக்கும் கிரேக்கர்கள் குழந்தாய்! அவர்களில் பெரும்பாலோர் பிராமணர் மதத்தைச் சேர்ந்தவர்களல்ல; பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். நீ உஜ்ஜைனிக்குப் போனால், அங்கே தங்களைக் கிரேக்கர்கள் என்றே வெள்ளையாகச் சொல்லிக்கொள்ளும் அநேக நாகர்களைக் காணலாம். அவர்களை எல்லாம் க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளும்படியாக, பிராமணர்கள் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறார்கள்.”
“ஒப்புக்கொள்வதின் மூலமும் ஒப்புக்கொள்ளச் செய்வதின்
____________________________________________________
** “ஸாங்க்ருதி ரந்திதேவம் சம்ருதம் ஸஞ்ஜய! ஸு ஸரும
ஆஸன் த்விஸத்லா ஹஸ்தரா தஸ்யஸு தாமஹாத்மநஹ
க்ருஹாநப்யா கதாந் விப்ராந் அதி தீந் பரிவேஷாஹா
துரோணபருவம் 67, 1-2
“தத்ர ஸ்மஸு தாஹ க்ரோ ஸர்ந்தி ஸு ம்ருஷ்ட மணி குண்டலாஹ
ஸூபம் பூயிஷ்டமஸ் நீத்வம் நாத்ய மாம்ஸம் யதா புரா”
துரோணபருவம் 67, 17-18
சாந்தி பருவம் 27-36
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 218 | 219 | 220 | 221 | 222 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, சொல்லிக், பிராமணர்கள், அவர்கள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

