முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 204
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 204
களைப் பற்றிக் கம்பீரமாகச் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால், ஹெராக்லிட்டோவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நித்தியத்துவத்தைக் கடந்து அப்பால் செல்லமுடியவில்லை. நிகழ்காலத்திலே அவர்களுக்கு அளவுக்கு மீறிய மோகம் இருந்தது. அதன் காரணமாக அவர்கள் எதிர் காலத்தையும் நிகழ்காலத்தோடு பிணைத்தே வைக்க விரும்பினார்கள். ஹெராக்லிட்டோ புத்தரைப் போலவே உலகம் இரண்டு வினாடிகள் கூட மாற்றமின்றி ஒரே மாதிரி இருப்பதில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதிலும் ஒரு சுயநலம் மறைந்திருக்கிறது.”
“தத்துவச் சிந்தனையில் தனி மனிதனின் சுயநலமா?”
“வயிறு எல்லோருக்கும் இருக்கிறது குழந்தாய்! அந்தக் காலத்தில் எங்கள் ஏதென்ஸ் நகரத்திலே ஜன ஆட்சி இருந்தது. ஆதாவது அரசனில்லாத அரசாங்கம் இருந்தது. முதலில் ஹெராக்லிட்டோவின் குடும்பத் தாரைப் போன்ற பெரிய பெரிய சேனா நாயகர்களே ஜன ஆட்சியின் சூத்திரதாரர்களாய் இருந்தார்கள். பின்னால் வியாபாரிகள் ஆட்சிக் கயிற்றைக் கையிலே எடுத்துக் கொண்டார்கள். இதைப் பார்த்த ஹெராக்லிட்டோ வருத்தமடைந்தார். ஆகவே மாற்றத்தை விரும்பினார். ஆனால் முன்னோக்கிச் செல்வதற்கல்ல; பின்னே திரும்பிச் செல்வதற்கு.”
“நமக்கு மாற்றம் வேண்டும். ஆனால், அது முன்னோக்கிச் செல்வதாய்
இருக்க வேண்டும்; பின்னோக்கி அல்ல. கடந்த காலம் பிணத்திற்குச் சமானம் என்று நான் கருதுகிறேன்.”
“சரியாகச் சொன்னாய் குழந்தாய்! புத்தர் பெருமானும் மாற்றத்தை விரும்பினார்; ஒரு சிறந்த உலகத்தை ஏற்படுத்துவதற்காக அந்த எதிர்கால நவ உலகத்திற்கு ஒரு முன் மாதிரியாகவே, புத்த சங்கத்தைத் தோற்றுவித்தார்!”
“ஜாதி சமய வேற்றுமை இல்லாத உலகம்; உயர்வு தாழ்வு இல்லாத உலகம்.”
“ஆம். அனுபவிப்பதற்கு அங்கு எல்லோருக்கும் சம உரிமை இருக்கும். அதே போல் வேலை செய்வதற்கும் சம உரிமை உண்டு. எங்கள் மகாஸ்தவீர் தர்மசேனர் வெளியே பெருக்கிக் கொண்டிருப்பதை நீ பார்த்திருப்பாய்.”
“ஓ! அந்தக் கறுத்தவரா?”
“ஆம்; அவர் எங்கள் எல்லோருக்கும் தலைவர். தினந்தோறும் அவருக்கு நாங்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்கிறோம். கோசல நாட்டின் பிக்ஷு சங்கங்கள் யாவற்றிக்கும் அவரே தலைவர்.”
“அவர் பறையர் குலத்தில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டேன்!”
“பிக்ஷு சங்கம் குலத்தைக் கவனிப்பதில்லை, குழந்தாய்! அது தகுதியைத்தான் கவனிக்கிறது. அவர் தனது தகுதியினாலும், கல்விப் பெருக்கினாலுமே எங்களுக்குத் தலைவராக இருக்கிறார். நாங்கள் அவரைத் தந்தையாகப் பார்க்கிறோம். அவருடைய பிக்ஷா பாத்திரத்தில் ஒரு கவளம் அன்னம் கிடைத்திருந்தாலும் சரியே, அவர் தோழர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் சாப்பிடமாட்டார். இதுதான் புத்தர் பெருமானுடைய உபதேசம். உடுத்துவதற்கு மூன்று
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 202 | 203 | 204 | 205 | 206 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆனால், எங்கள், அவர், குழந்தாய், என்று, இருந்தது, உலகம், எல்லோருக்கும் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

