முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 200
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 200
நம் நாட்டைச் சேர்ந்த சூத்திரர்கள், பறையர்கள், அடிமைகள் முதலியவர்களை நிரந்தரமாகக் கீழேயே அமுக்கிவைத்தார்கள். எந்த மதம் மனிதனுடைய இதயத்தை மலரச் செய்யவில்லையோ, எந்த மதம் மனிதர்களுக்கு அவர்களின் கத்தி பலத்தையும் பணப்பைகளின் பலத்தையும் கொண்டு இடமளிக்கிறதோ அந்த மதம் மனித சமுதாயத்திற்கு ஒரு களங்கமென்றே நான் கருதுகிறேன். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் ஆதிகாலந்தொட்டு இன்று வரை தோன்றியுள்ள பிராமணர்களின் நூல்கள் யாவற்றையும் படித்திருக்கிறேன். அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை வரலாறு, யாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவைகளில்- ஆதிகாலம் முதல் உலகம் நாள்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனாலின்று இந்தப் பிராமணர்கள்
எதையெடுத்தாலும் ‘சனாதனம்’ அதாவது ஸ்திரமானது- மாற்றமற்றது என்று சொல்லுகிறார்கள். உயிரற்றதற்குத்தான் வளர்ச்சியில்லை.”
“இந்தப் பொங்குதலுக்கு நான்தான் காரணமா, கோஷ்?”
“நீ காரணமாயிருப்பது பாராட்டுதற்குரிய விஷயம் பிரபா. நீ என் கவிதையிலே புதிய ஜீவனையும் புதிய வேகத்தையும் ஊட்டியதோடு மட்டு மல்ல; எனது பார்வையில் புதிய நோக்கைப் புகுத்தி மகத்தான உதவியைச் செய்திருக்கிறாய். நான் அறிவின் சிகரத்தை எட்டி விட்டதாக ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப்போலிக் கர்வத்திற்குப் பிராமணர்கள் சுலபமாக இரையாகி விடுகிறார்கள். பிராமணர்கள் எண்ண வழக்குகளிலும் (ஸ்மிருதி) ஏட்டுச்சுவடிகளிலுமே அறிவு எல்லையிட்டு அடங்கி இருக்கவில்லை. இவற்றிக்கு வெளியே அது அகண்டமாகப் பரந்திருக்கிறது.”
“நான் ஒரு பெண் பிறவி.”
“பெண்ணாகப் பிறந்ததற்காக மனிதரைத் தாழ்வாக மதிப்பவர்களை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்.”
“மற்றவர்களைக் காட்டிலும் கிரேக்கர்கள் பெண்களுக்கு அதிக மரியாதை செலுத்துகிறார்கள். அவர்கள் குழந்தைகளின்றியே இறந்து விட நேர்ந்தாலும் சரி, ஒரு மனைவி உயிரோடிருக்க மற்றொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.”
“ஆனால் இந்தப் பிராமணர்கள் நூற்றுக்கணக்கானவர்களைக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்; கேவலம், வரும்படிக்காக, கிரேக்கர்கள் பிராமண
மதத்தைத் தழுவவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.”
“புத்த மதத்தைத் தழுவியிருந்தாலும், பூஜைகளுக்காகவும் புரோகிதத்திற்காகவும் பிராமணர்களை அழைக்கவே செய்கிறோம்.”
“அவர்கள் தங்கள் சுயநலத்திற்காகக் கிரேக்கர்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளும் போது, புரோகிதம் செய்ய ஏன் வரமாட்டார்கள்? மேலும் தட்சணையும் கிடைக்கிறது.”
“உன்னுடைய பிராமணத்துவப் பெருமை உணர்ச்சியைப் போக்குவதற்கு நான் காரணமாய் இருக்கிறேனா?”
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 198 | 199 | 200 | 201 | 202 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், பிராமணர்கள், புதிய, மதம் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

