முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 176
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 176
ஆவல்.”
“நான் எந்த .இடத்தைச் சொல்ல முடியும்?”
“கிரேக்க தேசத்திற்குப் போக விரும்புகிறாயா?”
“அங்கு போக விருப்பமே.”
“அப்படியானால் அங்கேயே போவோம்.”
“ஆனால் வழியில் என்னை மறுபடியும் யாராவது பிடித்துக் கொள்வார்கள். அப்பொழுது நாகதத்தனைப் போல கருணை நிறைந்த ரட்சகனைப் பெற முடியாது.”
இதைச் சொல்லும் பொழுது சோபியாவினுடைய குரலிலே அளவு கடந்த மென்மை காணப்பட்டது. அவளது அழகிய பெரிய விழிகள் ஆவலோடு அவனைப் பார்த்தன. நாகதத்தன் நீண்டு தொங்கும் தங்க நிறமான அவளுடைய
கூந்தலைக் கோதிக் கொண்டே,
“நான் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். ஆனால், அதற்கு உன்னுடைய சம்மதம் வேண்டும்.”
“அது என்ன?”
“சக்கரவர்த்தியிடமும் அவளுடைய சகோதரியிடமும் நான் அவர்களின் மரியாதைக்குரிய ஹிந்து வைத்தியன் என்று எழுதி வாங்கிக் கொள்வேன்.”
“அப்படியானால், உன்னை யாரும் தொடமாட்டார்கள்.”
“நீ சம்மதித்தால் உலகத்திற்குக் காட்டுவதற்கு மாத்திரம் அந்தக் கடிதத்தில் வைத்தியனுடைய மனைவி என்று உன்னுடைய பெயரையும் எழுதி வாங்கிக் கொள்வேன்.”
இதைக் கேட்டதும் சோபியாவினுடைய கண்கள் பொங்கி வழிந்தன. அவள் நாகதத்தனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு,
“நாகா! நீ எவ்வளவு தயாளம் நிறைந்தவன். உன்னுடைய பெருந்தன்மையைக் கூட, நீ உணர்ந்து கொள்ள விரும்பவில்லை. நீ எத்தனை அழகன்! ஆனால், உன்னையே பார்த்துக் கொண்டிருக்கும், அந்த நீலக் கண்களை நீ ஒரு போதும் திரும்பிப் பார்த்ததில்லையே! ராஜகுமாரி ரோஸனா உன்மீதுள்ள காதலை வாய்விட்டுக் கூட என்னிடம் சொல்லியிருக்கிறாள். நோயாளி போன்றிருக்கும் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு அவளை மணம்முடிக்க அவளது பெற்றோர்கள் முடிவு கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவளோ உன்னையே விரும்புகிறாள்”.
“அதைத் தெரிந்து கொள்ளாதது நல்லதாய்ப் போய் விட்டது. சோபியா! இல்லாவிடில் அதை மறுக்க வேண்டிய கஷ்டம் ஏற்பட்டிருக்கும். அரச மாளிகையில் வளர்ந்தவளுக்கு உரியவனல்ல நான். ஒருகால் நான் யாருக்குமே உரியவனல்லாமல் இருக்கலாம். ஏனெனில் என்னைக் காதலிப்பவள் ஒருநாளும் சுகமாய் வாழ முடியாது. நல்லது; நீ விரும்பினால் சக்கரவர்த்தியின் கடிதத்தில் பெயரளவிற்கு உன்னை என்னுடைய மனைவி
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 174 | 175 | 176 | 177 | 178 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், உன்னுடைய, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

