எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. | 65 |
போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. | 66 |
போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. | 67 |
கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. | 68 |
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. | 69 |
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. | 70 |
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. | 71 |
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. | 72 |
தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. | 73 |
போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. | 74 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம் , போற்றி, நமச்சி, பாதம், போற்றியோ, என்னை, சங்கரா, திருமுறை, வேண்டும், திருச்சதகம், எங்கள், எம்பிரான், யானே, வள்ளல், ஒப்பில், திருவாசகம், எட்டாம், புவனம்
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->