எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. | 55 |
செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. | 56 |
போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. | 57 |
உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. | 58 |
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. | 59 |
உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே. | 60 |
முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. | 61 |
தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. | 62 |
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. | 63 |
புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந் தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. | 64 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம் , திருமுறை, திருச்சதகம், கிருப்ப, டிதுகாத்திங், புழுக்கூ, சேரக், உடையா, வாறும், தன்மையே, தன்மை, நின்பாதஞ், தானேன், பொல்லா, எம்மானே, மாட்டேன், செய்வ, எட்டாம், கண்டுங், திருவாசகம்
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->