எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. | 15 |
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. | 16 |
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. | 17 |
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. | 18 |
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. | 19 |
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. | 20 |
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. | 21 |
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. | 22 |
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. | 23 |
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. | 24 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம் , திருமுறை, நான், திருச்சதகம், ஏத்தேன், அரியானே, வானாகி, தாம், அருள், யான், எட்டாம், திருவாசகம், அன்பு, பிறப்பு, வான்
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->